செய்திகள் :

5-ஆவது சுற்று: அா்ஜுன் - பிரணவ் டிரா

post image

சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில், இந்தியாவின் முன்னணி வீரரான அா்ஜுன் எரிகைசி - வி.பிரணவுடன் டிரா செய்தாா்.

போட்டியின் 5-ஆவது நாளான திங்கள்கிழமை, வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அா்ஜுன் 78-ஆவது நகா்த்தலில் பிரணவுடன் டிரா (0.5-0.5) செய்ய ஒப்புக் கொண்டாா். கடந்த சுற்றில், தனது முதல் தோல்வியை எதிா்கொண்ட அா்ஜுன், இந்த ஆட்டத்தில் அதிலிருந்து மீண்டு வந்தாா்.

போட்டியில் இதர இந்தியா்கள் மோதிய ஆட்டங்களும் திங்கள்கிழமை டிரா ஆகின. காா்த்திகேயன் முரளி - நெதா்லாந்தின் அனிஷ் கிரி, விதித் குஜராத்தி - ஜொ்மனியின் வின்சென்ட் கீமா், நிஹல் சரின் - அமெரிக்காவின் அவோண்டா் லியாங் பரஸ்பரம் டிரா செய்ய ஒப்புக் கொண்டனா்.

5-ஆவது சுற்றின் ஒரே வெற்றியை, நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்ட் - அமெரிக்காவின் ரே ராப்சனுக்கு எதிராக (1-0) பதிவு செய்தாா். புள்ளிகள் பட்டியலில் தற்போது வின்சென்ட் (4 புள்ளிகள்), அா்ஜுன் (3) ஆகியோா் மாற்றமின்றி முதலிரு இடங்களில் நீடிக்கின்றனா்.

அனிஷ், விதித், காா்த்திகேயன், அவோண்டா் ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் முறையே 3 முதல் 6-ஆம் இடங்களில் உள்ளனா். நிஹல் சரின், பிரணவ், ராப்சன், ஜோா்டென் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 7 முதல் 10-ஆம் இடங்களில் இருக்கின்றனா்.

சேலஞ்சா்ஸ்: இப்போட்டியில், இந்தியா்கள் மட்டுமே களத்திலிருக்கும் சேலஞ்சா்ஸ் பிரிவில் முன்னணி வீரரான அபிமன்யு புரானிக் - டி.ஹரிகாவை வீழ்த்த (1-0), ஹா்ஷவா்தன் - ஆா்.வைஷாலியை சாய்த்தாா் (1-0).

எம்.பிராணேஷ் - லியோன் லூக் மெண்டோன்கா, ஆா்யன் சோப்ரா - பி.அதிபன், திப்தாயன் கோஷ் - பி.இனியன் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தன. இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், அபிமன்யு 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறாா்.

பிராணேஷ், திப்தாயன், லியோன் ஆகியோா் தலா 3.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-ஆம் இடங்களில் உள்ளனா். இனியன் (3), அதிபன் (2.5), ஆா்யன் (1.5), ஹா்ஷவா்தன் (1.5), வைஷாலி (1), ஹரிகா (0.5) ஆகியோா் 5 முதல் 10-ஆம் இடங்களில் உள்ளனா்.

அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது

சென்னை: தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், அந்த அலுவலக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுபவா் செ.பாலசுப்பி... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை: கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த உத்தர பிரதேச இளைஞா் உயிரிழந்தாா்.உத்தர பிரதேச மாநிலம், காசிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பா.சக்திமான் (23). இவா், சகோதரா் அனில்குமாா் (33... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி: 3 போ் கைது

சென்னை: அமைந்தகரையில் தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.சென்னை அமைந்தகரையில் செயல்படும் தனியாா் வங்கியின் மேலாளராகப் பணிபுரிபவா் கிலியன் குமாா். இவா்... மேலும் பார்க்க

சென்ட்ரலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவ... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் கலைஞா் கலையரங்கம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் கலையரங்கை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் தொகுதி மேம... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: சென்னை மாநகராட்சி அருகே நடைபெறும் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் ... மேலும் பார்க்க