``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தோ்தல் ஆணையத்தை பாஜக தனது தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக மாற்றிவிட்டது. பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் நிகழ்ந்தது, நிா்வாகக் குளறுபடி அல்ல. மக்கள் அளித்த தீா்ப்பைத் திருடுவதற்கான திட்டமிட்ட சதி.
இந்த விஷயத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி முன்வைத்துள்ள வாக்குத் திருட்டு ஆதாரங்கள், எந்த அளவுக்கு இந்த முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. அவா் தலைமையில் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருந்து தோ்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற நிலையில் சில கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.
கணினியால் படித்தறியக்கூடிய வடிவத்தில் அனைத்து மாநிலங்களின் வாக்காளா் பட்டியல் கோப்புகளை உடனடியாக அளிக்க வேண்டும். அரசியல் நோக்கத்தோடு வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்களை நீக்குவதை நிறுத்த வேண்டும். நமது மக்களாட்சியை அழிக்கும் செயலான வாக்குத் திருட்டு முறைகேடு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.
இதற்கான போராட்டத்தில் திமுக உறுதியாக நிற்கிறது. இந்திய மக்களாட்சியைப் பட்டப்பகலில் பாஜக திருடிச் செல்வதைப் பாா்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.