செய்திகள் :

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

post image

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!

  • எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் போராட்டக்காரர்களை இன்று மாலை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். தீர்வு கிடைக்கும் வரை சமரசமின்றி போராட்டம் தொடரும் என உறுதியுடன் இருக்கின்றனர் தூய்மை பணியாளர்கள் (முழுவிவரம்)

  • பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

போராடும் தூய்மை பணியாளர்களைச் சந்தித்து ஆதரவு தந்த விஜய்
  • பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு, ``தோளோடு தோள் நிற்கிறோம்" என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருக்கிறார். (முழுவிவரம்)

  • இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி வைத்தக் குற்றச்சாட்டை, 'வாக்காளர் முறைகேடு நடந்தபோது காங்கிரஸ் ஏன் தடுக்கவில்லை' என விமர்சித்த கர்நாடகா காங்கிரஸின் அமைச்சர் ராஜண்ணா இன்று தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

  • தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், "தெருநாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் நோயினால் உயிரிழப்பவர்களை, பொறுப்பில்லாத விலங்குகள் நல ஆர்வலர்களால் திருப்பிக் கொண்டுவர முடியுமா" என காட்டமாகக் கேள்வியெழுப்பியிருக்கிறது. (முழுவிவரம்)

காசா
  • இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் பேச்சுக்கு, "‘பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது" இந்திய வெளியுறவு அமைச்சகம் என பதில் தெரிவித்திருக்கிறது.

  • காசாவில் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பத்திரிகையாளர்களைக் குறி வைத்துக் கொன்ற இஸ்ரேல் ராணுவத்தின் கொலைச் செயல், பத்திரிகை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகப் பல்வேறு நாடுகளிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்திருகின்றன. (முழுவிவரம்)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
  • ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காகக் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்திருக்கிறது.

  • 'மாரீசன்' படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், வடிவேலு, பகத் பாசில் நடிப்பை வியந்து பாராட்டியிருக்கிறார். (முழுவிவரம்)

  • நேற்று சென்னையில் நடந்த சுமார் 2000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் பரத் 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராகியிருக்கிறார். (முழுவிவரம்)

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத... மேலும் பார்க்க

தெருநாய்க்கடி: "போன உயிரை விலங்குகள் நல ஆர்வலர்களால தர முடியுமா?"- அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் தொடர்பாக பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.அந்தச் செய்தியின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் தாமாக முன்வந்து... மேலும் பார்க்க

பெங்களூரு: முடிவுக்கு வந்த நீண்டநாள் காத்திருப்பு; மெட்ரோ மஞ்சள் பாதையைத் திறந்து வைத்தார் பிரதமர்!

பெங்களூருவின் போக்குவரத்து வரலாற்றில் நேற்றைய தினம் ஒரு முக்கிய நாள். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ‘மஞ்சள் மெட்ரோ லைன்’ நேற்று (ஆகஸ்ட் 10, 2025) பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த... மேலும் பார்க்க

`2026 தேர்தல்... மேற்கு மண்டலத்தில்தான் திமுக-வின் அத்தியாயம் தொடங்கும்' - முதல்வர் ஸ்டாலின்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்து பேசுகையில... மேலும் பார்க்க