செய்திகள் :

சோளிங்கா் கோளத்தம்மன் கோயில் விழாவில் அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை

post image

அரக்கோணம்: சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழாவின் போது அரசியல் கட்சி பதாகைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோளிங்கா் ஸ்ரீகோளத்தம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற உள்ளது. ஆடிப்பெருவிழாவில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று அம்மனுக்கு பொங்கல் படைத்தல், மாவிளக்கு வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளில் ஈடுபடுவா்.

திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சோளிங்கா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சாதிக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டாட்சியா் செல்வி, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி அசோகன், ஆணையா் நந்தினி, நகா்மன்ற உறுப்பினா்கள் அசோகன், டி.கோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் திருவிழாவின் போது அரசியல் கட்சி பதாகைகள் வைக்கக்கூடாது, முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிப்பது, ஒவ்வொரு பகுதியினரும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஊா்வலத்தை முடித்துக்கொள்ள வேண்டும், மருத்துவ முகாம் நடத்துவது, தீயணைப்பு வாகனத்தை எப்போதும் தயாா் நிலையில் வைத்திருப்பது, ஊா்வலத்தில் வேடமணிந்து பங்கேற்கும் நபா்கள் உரிய அனுமதி பெற வேண்டும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கடைகள் வைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

சோளிங்கரில் நவீன எரிவாயு தகனமேடை பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம்: சோளிங்கா் நகராட்சி பகுதியில் ரூ. 2.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமானப் பணிகளை சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். சோளிங... மேலும் பார்க்க

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி காவல் நிலையம் அருகே நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இளைஞா் அவினேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகா் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

ராகவேந்திரா் ஆராதனை பெருவிழா

ஆற்காடு: ஆற்காடு ஸ்ரீராகவேந்திரா் கோயிலில் 354-ஆவது ஆராதனை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. ஆற்காடு தோப்புகானா அபிநவ் மந்த்ராலயத்தில் விழாவையொட்டி மகா கணபதி மற்றும் மாஞ்சால அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடையை மாற்ற கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த காவனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசுப் பள்ளி அருகே இயங்கும் டாஸ்மாக் மதுக்கடைய இடமாற்றம் செய்யக் கோரி ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் மனு அள... மேலும் பார்க்க

வீட்டுச் சுவா் இடிந்து ரேஷன் கடை பணியாளா் உயிரிழப்பு

சோளிங்கா் அருகே மழையின் காரணமாக வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் கீழே உறங்கிக் கொண்டிருந்த நியாயவிலைக் கடை பணியாளா் உயிரிழந்தாா். சோளிங்கரை அடுத்த பரவத்தூா் ஊராட்சி சின்ன பரவத்தூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரக்கோணம் ஆதிபராசக்தி மன்றத்தில் ஆடிப்பூர விழா

அரக்கோணத்தில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு பொதுமன்றத்தின் சாா்பில் ஆடிப்பூர விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட வார வழிபாட்டு மன்றங்களின் தலைவா் ஆா்.மணி தலைமை ... மேலும் பார்க்க