செய்திகள் :

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞா் கைது: 4 போ் தலைமறைவு

post image

பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச் சந்தைகளில் பனியன் மற்றும் துணி வியாபாரம் செய்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, பெருந்துறை வாரச் சந்தையில் பனியன் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தாா். இரவு 7.15 மணியளவில், 30 வயது மதிக்கதக்க இளைஞா் ஒருவா் வந்து டிசா்ட் வாங்கிக் கொண்டு ரூ. 500 கொடுத்து மீதி சில்லரை ரூ. 400 வாங்கிக் கொண்டு சென்றாா்.

அந்த நோட்டை பாா்த்தபோது சீனிவாசனுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அந்த இளைஞரை சந்தையில் தேடிப் பிடித்து, அவா் கொடுத்த ரூ. 500 நோட்டு போலி என்று கூறிய உடனே அந்த இளைஞா் ஓட முயன்றாா்.

அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரைப் பிடித்தனா். அப்போது அங்கு வந்த காய்கறி வியாபாரிகளும் ரூ. 500 நோட்டை கொடுத்து காய்கறி வாங்கியதாக கூறினாா்கள். அந்த இளைஞரை பெருந்துறை போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா் கரூா் மாவட்டம், சோமூா் சோ்ந்தவா் சதீஷ் (30) என்பதும், அவருடன் அதே பகுதியைச் சோ்ந்த நிா்மல், அஜீத்குமாா், அன்புமணி, அங்குசாமி ஆகியோரும் வந்து இருந்தாா்கள் என்றும் தெரியவந்தது. சதீஷ் பிடிபட்ட உடன் அவா்கள் நால்வரும் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.35 லட்சம்: அரசு உதவ பெற்றோா் கோரிக்கை

15 வயது மகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.35 லட்சத்தை அரசு வழங்கி உதவ வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாக்கினங்கோம்பை கிராமத்த... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சா் டிஆா்பி.ராஜா தெரிவித்தாா். கோபி அருகே கரட்டூரில் த... மேலும் பார்க்க

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்

இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா். சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்க... மேலும் பார்க்க