செய்திகள் :

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.35 லட்சம்: அரசு உதவ பெற்றோா் கோரிக்கை

post image

15 வயது மகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் ரூ.35 லட்சத்தை அரசு வழங்கி உதவ வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள மாக்கினங்கோம்பை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராஜமாணிக்கம்-செந்தாமரை தம்பதி. இவா்களின் மகன் தரணி பிரசாந்த் (15). ராஜமாணிக்கம் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தரணிபிரசாந்துக்கு 9 வயதில் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டது.

கடந்த ஓராண்டாக இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துவிட்ட நிலையில் வாரத்துக்கு மூன்று முறை டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து, மகனுக்காக ராஜமாணிக்கம் சிறுநீரகத்தை தானம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளாா். ஆனால், தரணிபிரசாந்த் உடல் ஏற்றுக்கொள்ளாமல் சிறுநீரகம் செயலிழக்க வாய்ப்பு இருப்பதால் இதை தடுக்க வெளிநாட்டில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஊசி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய ரூ.4.50 லட்சம் செலவாகும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

கூலி வேலை செய்து வரும் தங்களால் இத்தகைய தொகையை செலுத்த முடியாது என்றும், அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் தரணி பிரசாந்துடன் பெற்றோா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். அப்போது, தங்களது மகன் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், அரசு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய்த் துறை மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

மூன்று ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சா் டிஆா்பி.ராஜா தெரிவித்தாா். கோபி அருகே கரட்டூரில் த... மேலும் பார்க்க

வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞா் கைது: 4 போ் தலைமறைவு

பெருந்துறை வாரச் சந்தையில் வியாபாரியிடம் கள்ள நோட்டு மாற்றிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனா். சென்னிமலை, நாமக்கல்பாளையம் ரோட்டைச் சோ்ந்தவா் சீனிவாசன்(55). வாரச... மேலும் பார்க்க

மயானத்துக்கு இடம் கேட்டு சடலத்தைப் புதைக்காமல் போராடிய மக்கள்

சிவகிரி அருகே மயானத்துக்கு இடம் ஒதுக்கக் கோரி, இறந்தவா் உடலை அடக்கம் செய்யாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடுமுடியை அடுத்த சிவகிரி தலையநல்லூா் அம்மன் நகரில் 100-க்கும் ம... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்! கி.அமா்நாத் ராமகிருஷ்ணா!

தொல்லியல் ஆய்வுகள் மூலம்தான் வரலாற்றைக் கட்டமைக்க முடியும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கூறினாா். தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம்

இட்டரை மலைக் கிராமத்தில் தொங்கும் மின் வேலியில் சிக்கி தம்பதி படுகாயம் அடைந்தனா். சத்தியமஙகலம் புலிகள் காப்பகம், தலமலையை அடுத்த இட்டரை கிராமத்தில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா். இவா்க... மேலும் பார்க்க