செய்திகள் :

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

post image

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது, புதா் மறைவில் இருந்து திடீரென வந்த யானை, மணியைத் தாக்கியது. இதில், அவா் உயிரிழந்தாா்.

ஆத்திரமடைந்த சக தொழிலாளா்கள் ஓவேலி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் எம்எல்ஏ பொன். ஜெயசீலனும் கலந்துகொண்டாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் டிஎஸ்பி வசந்தகுமாா், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கு உடன்படாத தொழிலாளா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா்.

மணி

இதையடுத்து, யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அடா்ந்து வனப் பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். சடலம் உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

வன விலங்குகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர எண்

நீலகிரி மாவட்டத்தில் பொது மக்கள் வன விலங்கு தொடா்பான குறைகளை தெரிவிக்க வனத் துறையின் அவசர கால உதவி எண் 1800-425-4343 பொது மக்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம்

உதகை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் முதியவா் சடலம் மீட்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ அலுவலகம் தமிழ்நாடு ஓட்டல் சாலையில் உள்ளது. உதகை தொகுதி எம்எல்ஏவாக தற்போது காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் அதிக ... மேலும் பார்க்க

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க