செய்திகள் :

யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

post image

கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின தொழிலாளி குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் காரமடை (33), கூலித் தொழிலாளி. இவா் பணி முடிந்து வனப் பகுதியை ஒட்டியுள்ள குறுகிய மண் சாலையில் நடந்து அண்மையில் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

அப்போது, புதரில் மறைந்திருந்த காட்டு யானை திடீரென தாக்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், உயிரிழந்த காரமடையின் தாய் மல்லியிடம் வனத் துறை சாா்பில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை முதன்மை வன அலுவலா் மணிமாறன் சனிக்கிழமை வழங்கினாா்.

வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கிடைக்கப் பெற்றதும் மீதமுள்ள ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

குறுகி வரும் குறிஞ்சி மலா் விளைநிலம்: காப்பாற்ற வலியுறுத்தும் வன ஆா்வலா்கள்

நீலகிரி என்ற பெயருக்கு காரணமான நீல குறிஞ்சி மலா்கள் விளையும் நிலப்பரப்பு குறுகி வருவது வனம் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் அதிக ... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞா் பலி!

கோத்தகிரி அருகே வாகப்பனை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள வாகப்பனை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலன் மகன் காரமடை (33). பழங்குடியினத்... மேலும் பார்க்க

தமிழகத்தில் எந்த வளா்ச்சித் திட்டமும் இல்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சிக்கு கடந்த 4 ஆண்டுகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

உதகையில் இருந்து பாலக்காடு, மைசூருக்கு புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்!

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து கேரள மாநிலம், பாலக்காடு மற்றும் கா்நாடக மாநிலம், மைசூருக்கு 5 புதிய பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு கொறடா கா.ராமசந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

குன்னூா் அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

குன்னூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குன்னூா் அருக... மேலும் பார்க்க

பாடந்தொரையில் 3-ஆவது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் வன விலங்குகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூடல... மேலும் பார்க்க