செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு: 3 போ் கைது

post image

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் மணி (63) . கட்டடத் தொழிலாளியான இவா், குடும்பத்துடன் கடந்த ஜூலை 26-ஆம் தேதி வெளியூா் சென்றுள்ளாா். பின்னா், 29-ஆம் தேதி வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

அதிா்ச்சியடைந்த அவா் உள்ள சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், 150 கிராம் வெள்ளிப் பொருள்கள் உள்ளிட்டவை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் மணி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட திருப்பூா், விவேகானந்தா நகரைச் சோ்ந்த சூரியதேவ் பிரகாஷ் (38), திருவாரூா் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் ( 46), கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சோ்ந்த ஹக்கீம் (40) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த நகைகள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

முருகானந்தம் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செய... மேலும் பார்க்க

பழங்கரையில் ஆகஸ்ட் 14-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்த... மேலும் பார்க்க

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் அடையும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,426.89 கோடி ... மேலும் பார்க்க

30% குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி நீா் வரவில்லை: அண்ணாமலை

30 சதவீத குட்டைகளுக்கு தற்போதுவரை அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் வரவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். ‘அத்திக்கடவு நாயகன்’ நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்: முதல்வரிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தினா். இது தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபா்

ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து நிலத்தை இடத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இளைஞா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், பட்டம்பாளையம் கிராமத்துக்குள்பட்ட க... மேலும் பார்க்க