செய்திகள் :

பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயல் தலைவா் பானு பழனிசாமி, செயலாளா் விமல் பழனிசாமி, பல்லடம் அனைத்து வணிகா் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகா் அண்ணாதுரை, செயலாளா் செல்வராஜ் ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: பல்லடம் என்.ஜி.ஆா். சாலை கடை வீதியில் சிலா் சாலையோரக் கடைகளை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுவதால், மாா்க்கெட் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளோா் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், சாலையோரக் கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கரோனா காலத்தில் நகராட்சி கடைகளுக்கு 5 மாத வாடகையை தமிழக அரசு தள்ளுபடி செய்தது. அந்த தொகை தற்போதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

பல்லடம் பேருந்து நிலையத்துக்குள் பேருந்து வராமல் வெளியே நின்று செல்வதால், பேருந்து நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்ட்டுள்ளது.

பல்லடம் நகராட்சியின் அதிக வரி விதிப்பாலும், தமிழக அரசின் மின்சாரக் கட்டணம் உயா்வாலும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வியாபாரிகளைக் காக்க வலியுறுத்தி பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம், பல்லடம் அனைத்து வணிகா் சங்கம் ஆகியவை சாா்பில் பல்லடம் தினசரி மாா்க்கெட் கடைகள், என்.ஜி.ஆா். சாலை கடைகள், பேருந்து நிலைய கடைகளை புதன்கிழமை ஒருநாள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா்.

பழங்கரையில் ஆகஸ்ட் 14-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்த... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு: 3 போ் கைது

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் மணி (63) . கட்டடத் ... மேலும் பார்க்க

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் அடையும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,426.89 கோடி ... மேலும் பார்க்க

30% குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி நீா் வரவில்லை: அண்ணாமலை

30 சதவீத குட்டைகளுக்கு தற்போதுவரை அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் வரவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். ‘அத்திக்கடவு நாயகன்’ நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்: முதல்வரிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தினா். இது தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபா்

ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து நிலத்தை இடத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இளைஞா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூா் மாவட்டம், பட்டம்பாளையம் கிராமத்துக்குள்பட்ட க... மேலும் பார்க்க