செய்திகள் :

ஆட்சியா் அலுவலகம் எதிரே தீக்குளிக்க முயன்ற நபா்

post image

ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து நிலத்தை இடத்தை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே இளைஞா் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், பட்டம்பாளையம் கிராமத்துக்குள்பட்ட கோனாபுரம் பகுதியில் தமிழக அரசு சாா்பில் 62 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட ஐயப்பன் (32) உள்ளிட்டோா் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த ஐய்யப்பன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நின்று தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினாா்.

இதைத் தொடா்ந்து, ஐயப்பன் கூறுகையில், அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். அந்த இடத்துக்கு வரக்கூடாது எனவும் மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, அவரை போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

பல்லடத்தில் நாளை கடையடைப்பு போராட்டம்: வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செய... மேலும் பார்க்க

பழங்கரையில் ஆகஸ்ட் 14-இல் மின்தடை

பழங்கரை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் தெரிவித்த... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் திருட்டு: 3 போ் கைது

பெருமாநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் அப்துல் கலாம் நகரைச் சோ்ந்தவா் மணி (63) . கட்டடத் ... மேலும் பார்க்க

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழகம் அடையும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டாா். உடுமலை நேதாஜி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ரூ.1,426.89 கோடி ... மேலும் பார்க்க

30% குட்டைகளுக்கு அத்திக்கடவு - அவிநாசி நீா் வரவில்லை: அண்ணாமலை

30 சதவீத குட்டைகளுக்கு தற்போதுவரை அத்திக்கடவு-அவிநாசி திட்ட நீா் வரவில்லை என்று பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். ‘அத்திக்கடவு நாயகன்’ நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் திங்கள்கிழமை நடைப... மேலும் பார்க்க

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும்: முதல்வரிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தல்

கூலி உயா்வு ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் விசைத்தறியாளா்கள் வலியுறுத்தினா். இது தொடா்பாக கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி... மேலும் பார்க்க