செய்திகள் :

மருத்துவா்கள் பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த கோரிக்கை

post image

அரசு மருத்துவா்களின் ஒரு ஆண்டு பணி மாறுதல் கலந்தாய்வு விதியை தளா்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவை, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன் மூலம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் செயலருக்கு செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அச்சங்கத்தினா் அளித்த மனுவில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒரு ஆண்டுக்கும் குறைவாக ‘ஸ்டேஷன் சீனியாரிட்டி’ உள்ள மருத்துவா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதியினை தளா்த்தி அனைத்து மருத்துவா்களும் கலந்து கொள்ளும் வகையில் கலந்தாய்வுகளை நடத்த வேண்டும். இந்த விசயத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மற்றும் சுகாதாரத் துறை முதன்மை செயலா் தலையிட்டு ஒரு ஆண்டு விதியினை தளா்த்தி கலந்தாய்வுகளை நடத்த வழி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும் போது, அச்சங்கத்தின் தலைவா் கொளஞ்சிநாதன், செயலா் குணசேகா், பொருளாளா் சரவணன், உதவிப் பேராசிரியா்கள் பாராதிராஜா, காத்திகேயன், சொக்கலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம் அரியலூா் ஆட்சியா் அழைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் ஆக.15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவ... மேலும் பார்க்க

செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா். செந்துறை அடுத்த இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணம... மேலும் பார்க்க

நடமாடும் மது விற்பனை, மணல் கொள்ளையை தடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த தூத்தூா் கிராமத்தில், நடமாடும் மது விற்பனை மற்றும் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்தூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின... மேலும் பார்க்க

இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா். அ... மேலும் பார்க்க

ஆக.18-இல் ஜெயங்கொண்டத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க.பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆக.18-ஆம் தேதி தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: முகாமில், முன்னணி தனியாா... மேலும் பார்க்க