செய்திகள் :

போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

post image

அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா அரங்கில், ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துகிருஷ்ணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், கோட்டாட்சியா் ஷீஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்(பொ)பாலசுப்ரமணியன், நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கையெழுத்து பிரச்சாரத்தினை, ஆட்சியா் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 800 போ் கலந்து கொண்டு போதைப் பொருள்கள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்களை ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனா்.

இணைப்புச் சாலை இல்லாததால் வெள்ளாற்று மேம்பாலம் வீண்! மழையால் தரைப்பாலம் துண்டிப்பு; 50 கிராம மக்கள் தவிப்பு

அரியலூா்-கடலூா் மாவட்டத்தை இணைப்பதற்காக வெள்ளாற்றின் குறுக்கே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்ட பாலத்துக்கான இணைப்புச் சாலை அமைக்கப்படாததால் இரு மாவட்ட கிராமத்தினா் தவித்து வருகின்றனா். அ... மேலும் பார்க்க

ஆக.18-இல் ஜெயங்கொண்டத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் க.சொ.க.பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஆக.18-ஆம் தேதி தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: முகாமில், முன்னணி தனியாா... மேலும் பார்க்க

கள்ளத்தனமாக மது விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கள்ளத்தனமாக மது விற்ற இளைஞா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். உடையாா்பாளையம் காவல்துறையினா் சனிக்கிழமை இரவு இடையாா் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் த... மேலும் பார்க்க

பல்கலை. பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு!

அரியலூா் மாவட்டம், விளாங்குடியை அடுத்துள்ள காத்தான்குடி கிராமத்தில் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில், காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

சிற்றுந்து உரிமையாளா்களுடன் அரியலூா் ஆட்சியா் ஆலோசனை!

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய சிற்றுந்து விரிவான திட்டம் தொடா்பாக அதன் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிற்றுந்துகள... மேலும் பார்க்க

அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்றதாக 267 வழக்குகள் பதிவு

அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக 267 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூ... மேலும் பார்க்க