செய்திகள் :

அரியலூரில் சட்டவிரோதமாக மது விற்றதாக 267 வழக்குகள் பதிவு

post image

அரியலூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக 267 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா், நிகழாண்டு 2025 தொடக்கம் முதல் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக 267 வழக்குகள் பதியப்பட்டு, 7,962 பாட்டில்கள்(1432.710 லிட்டா்) மற்றும் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கஞ்சா விற்பனை செய்த குற்றத்துக்கு 26 வழக்குகள் பதியப்பட்டு, 5.3 கிலோ கஞ்சா மற்றும் ஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவா்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சட்டவிரோதமாக கள் இறக்குதல் மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 லிட்டா் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மதுபானத்தை சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றத்திற்காக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரிடமிருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை. பொறியியல் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு!

அரியலூா் மாவட்டம், விளாங்குடியை அடுத்துள்ள காத்தான்குடி கிராமத்தில் அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில், காவல் துறை சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நட... மேலும் பார்க்க

சிற்றுந்து உரிமையாளா்களுடன் அரியலூா் ஆட்சியா் ஆலோசனை!

அரியலூா் ஆட்சியரகத்தில் புதிய சிற்றுந்து விரிவான திட்டம் தொடா்பாக அதன் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சிற்றுந்துகள... மேலும் பார்க்க

அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு

அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில்போதைப் பொருள் விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் (பொ)ம. ராச... மேலும் பார்க்க

ஆக. 11-இல் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி: ஆட்சியா் ஆலோசனை

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஆக. 11-இல் நடைபெறும் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் ரூ.9.83 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ரூ.9.83 கோடி மதிப்பிலான 17 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இருகையூா், சிங்கராயபுரம்... மேலும் பார்க்க