செய்திகள் :

செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!

post image

பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில்,

செப்டம்பர் 8 ஆம் தேதி கோலாகாட் மாவட்டத்திற்கு மோடியின் வருகைக்காக டெர்கானில் உள்ள அஸ்ஸாம் போலீஸ் மாநாட்டு மையத்தில் ஏற்பாடுகளை சர்மா ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்துவைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவார். ஏற்பாடுகள் அனைத்து முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வேளாண் அமைச்சர் அதுல் போரா, நிதி அமைச்சர் அஜந்தா நியோக், போக்குவரத்து அமைச்சர் ஜோகன் மோகன், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பிஜுஷ் ஹசாரிகா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கேஷப் மஹந்தா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரூபேஷ் கோவாலா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலாளர் ரவி கோட்டா, டிஜிபி ஹர்மீத் சிங் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Assam Chief Minister Himanta Biswa Sarma on Tuesday reviewed the preparations for the upcoming visit of Prime Minister Narendra Modi to the state, according to his office.

திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஆகஸ்ட் 13 ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க