செய்திகள் :

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!

post image

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.

ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 15 வயது சிறுமி ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணையில் சிறுமியை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில் அதிருப்தி அடைந்த சிறுமி, நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

A girl was seriously injured after jumping from Chennai High Court

இதையும் படிக்க : கூலிக்காக போலி விடுப்பு வேண்டாம்.. டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!

பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், செப்டம... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஆகஸ்ட் 13 ... மேலும் பார்க்க

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க