செய்திகள் :

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

post image

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உலக அதிசயங்களுக்கே சவால் விடுவதாக உள்ளது.

ஏதோ திட்டமிடப்படாமல், தெரியாமல் நடந்த தவறுதான் என்று சொல்கிறார்கள் என வைத்துக் கொள்வோம், அதெப்படி ஒரு முறைகூட யாருமே ஒரே பக்கத்தில் இப்படி ஒரே பெண், ஆறு முறை ஒரே புகைப்படத்துடன் இருக்கிறாரே என்று பார்த்திருக்க மாட்டார்களா? இது தொழில்நுட்பத் தவறு என்றால், ஒரே வாக்காளர் பட்டியலில் ஒரே பக்கத்தில் இருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடியா ஒதுக்கப்பட்டிருக்கும்?

ஒருவரே ஒரே வாக்குச்சாவடியில் மீண்டும் மீண்டும் வந்து வாக்களித்தால் சிக்கலாகிவிடும் என திட்டமிட்டு வேறு வேறு வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தால், அதுவும் தொழில்நுட்பம்தான் இப்படி திட்டமிட்டு கோளாறு செய்திருக்குமோ? என்று சமூக ஊடகங்களில் இந்தப் பக்கத்தைப் பகிர்ந்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சுஷ்மா குப்தா சம்பவம் நடந்திருப்பது, மகாராஷ்டிரத்தின் பல்காரில் உள்ள வாக்காளர் பட்டியலில்தான். பச்சை நிற புடவையுடன் சுஷ்மா குப்தா என்ற பெண் வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களுடன் (EPIC) 6 முறை இடம்பெற்றுள்ளார்.

அதாவது, நாளாசோபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில், வாக்காளர் பெயர் சுஷ்மா குப்தா, உறவினர் பெயர் சஞ்சய், வயது 39 என அனைத்துத் தகவல்களும் ஒன்றுபோல பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஒவ்வொரு வாக்காளர் எண்ணையும் பதிவு செய்து பார்த்தால் ஒரு வாக்காளர் எண்ணுக்கு புனித அந்தோணியர் பள்ளி என்றும், மற்றொரு வாக்காளர் அட்டைக்கு புனித மேரி உயர்நிலைப் பள்ளி என ஒவ்வொரு வாக்காளர் அட்டைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது அதிசயமே அசந்துபோகும் அதிசயம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

திருப்பதி மலைப்பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம்!

வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் திருப்பதி மலைப் பாதையில் செல்ல வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி திருமலை கோயிலுக்குச் செல்லும் வாகனங்கள் சோதனைக்குப் ப... மேலும் பார்க்க

மூக்கு துவாரம் வழியாக மூளைக் கட்டி அகற்றம்! மாற்றி யோசித்த மருத்துவர்கள்

சண்டிகர்: உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் மூளையில் வளர்ந்திருந்த கட்டிய மூக்குத் துவாரம் வழியாகவே அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.மூளையில் வளர்ந்திருந்த 4.5 செ.மீ... மேலும் பார்க்க

2017-க்குப் பின்... சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு!

கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்தது.காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததாலும், பரவலான பருவமழையின் தாக்கத்தாலும... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி

தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனை... மேலும் பார்க்க

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க