செய்திகள் :

தூக்கம் தொலைதூரமா? ஒன்றிரண்டு ஏலக்காய் போதும்..!

post image

'ஏலக்காய்' - இதில் நன்மைகள் பல இருந்தாலும், தூக்கம் எமக்கு தொலைதூரம் என்று கண் விழி சிமிட்டிக் கொண்டிருப்பரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான சிறந்த உணவாக ஏலக்காய் இருக்கும்.

ஏலக்காயில் உள்ள 'மெக்னீசியம்' மற்றும் 'ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ்’ நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் ஆக்குவதுடன் 'மெலடோனின்’ சுரப்பையும் ஊக்குவிக்கிறது. தூக்கம் வருவதற்கு உடலில் 'மெலடோனின்’ என்னும் ஹார்மோன் முக்கிய பங்காற்றுகிறது.

ஆக, ஏலக்காயை இரவில் மென்று சுவைப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது; இதயத்துடிப்பை இயல்பான வேகத்தில் இயங்கச் செய்ய வழிவகுக்கிறது; பதற்றத்தை தணித்து நன்றாக தூங்க உடலைத் தயார்படுத்துகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதனை தினசரி வழக்கமாக்கிக் கொள்வதும் நல்லதே..!

ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் 'கல்லீரல்’ நலமாக இயங்க ஊக்குவிக்கிறது. உடலிலுள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற இவை உதவுவதால் ரத்தம் சுத்தமாகிறது.

இதனால் இயற்கை முறையிலேயே மேனி பொலிவு பெறுகிறது, உடலில் ஆற்றல் மேம்படுகிறது, நோயெதிர்ப்பு சக்தியும் கூடுகிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஆயுர்வேத மருத்துவ முறையில் 'திரிதோஷ நிவர்த்தி’ மூலிகைகளுள் ஒன்றாக கருதப்படும் ஏலக்காய் மனித உடலில் 'கபம், வாதம், பித்தம்’ ஆகிய மூன்றையும் சீராக்கும் அருமருந்தும்கூட..!

Chewing cardamom at night can reduce stress levels and prepare the body for restful slumber.

கரோனாவுக்குப் பின் உடல் சோர்வு அதிகம் ஏற்படுகிறதா? என்ன காரணம் தெரியுமா?

கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்குப்பின் உடல் சோர்வு அதிகமாக ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடலில் நெடுங்காலத்துக்கு ... மேலும் பார்க்க

சூடான இட்லியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்! ஹார்வர்ட் மருத்துவர் சொன்ன தகவல்

இட்லி வயிற்றுக்கு நலம் பயக்கும் உணவுகளுள் முக்கியமான ஒன்று என்று ஹார்வர்ட் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஹார்வர்டு மற்றும் ஸ்டான்ஃபோர்டு மருத்துவ நிறுவனங்களில் பணியாற்றி கேஸ்ட்ரோ-எண்டராலஜி (குடல்... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு இதய நோய் அதிகம் ஏற்பட என்ன காரணம் தெரியுமா?

இந்தியர்களுக்கு இதய நோய் அதிகம் ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அறுபதாயிரத்... மேலும் பார்க்க