செய்திகள் :

மனு கொடுக்க சென்ற விஏஓ-க்களை ‘வெளியே போ’ எனக் கூறிய உதவி ஆட்சியர்.! முற்றுகை போராட்டம்!

post image

மனு கொடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர்களை சிதம்பரம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் வெளியே போக சொன்னதால் அவரை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதியான கட்டிட வசதி மின்சார வசதி அதேபோல் இணையதள வசதி , மோடத்துடன் கூடிய மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் போன், கழிவறை வசதி உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுக்கும் போராட்டத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் ஒருநாள் விடுமுறையாக இன்று கிராம நிர்வாக அலுவலர்கள், சிதம்பரம் உதவி ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கச் சென்றுள்ளனர்.

அப்போது உதவி ஆட்சியர் கிஷன்குமார் அனைவரும் உள்ளே வர வேண்டாம் ஆறு பேர் மட்டும் உள்ளே வாருங்கள் எனவும் மற்றவர்களை ‘வெளியே போ...’ என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சுழல் உருவானது.

மேலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் உதவி ஆட்சியர் கிஷன் குமார் மோதல் போக்கோடு பேசி வருவதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி ஆட்சியர் இடையிலான மோதல்போக்கு சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

deputy Collector asks VAOs who went to submit petitions to leave! Protest in office!

இதையும் படிக்க : 8 ஆண்டுகள்.. 5 குழந்தைகள்..! நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பேருக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்கள்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்!

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் 51,853 பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் சா.மு.நாசர் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.தமிழ்நாட்டில... மேலும் பார்க்க

செப்.8ல் பிரதமர் மோடி அஸ்ஸாம் வருகை: ஏற்பாடுகளை ஆய்வு செய்த முதல்வர்!

பிரதமர் நரேந்திர மோடி மாநில வருகைக்கான ஏற்பாடுகளை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஆய்வு மேற்கொண்டதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், செப்டம... மேலும் பார்க்க

பொறியியல் படிப்பு: துணைக் கலந்தாய்வுக்கு ஆக. 14 வரை விண்ணப்பிக்கலாம்!

இளநிலை பொறியியல் (B.E / B.Tech) படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் திருவள்ளூர் உள்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.ஆகஸ்ட் 13 ... மேலும் பார்க்க

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த சிறுமி படுகாயம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த சிறுமி செவ்வாய்க்கிழமை பிற்பகல் படுகாயமடைந்தார்.ஆள்கொணர்வு வழக்கில் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி மக்கள் போராட்டம்; கண்டுகொள்ளாத கனிமொழி! - அண்ணாமலை கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதல்வரோ திமுகவினரோ அவர்களைக் கண்டுகொள்ளவில்லை என தமிழக பாஜக முன்னாள... மேலும் பார்க்க