செய்திகள் :

காத்து வாக்குல ரெண்டு காதல் சீரியலுக்கு கிடைத்த அங்கீகாரம்!

post image

சின்ன திரையில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் காரணமாக, திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த தொடர் இனி, சனிக்கிழமையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளிபரப்பான சில நாள்களில் கூடுதல் நாள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த தொடருக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு காத்து வாக்குல ரெண்டு காதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் விளம்பரப் படங்களில் நடித்து புகழ் பெற்ற அனில் செளத்ரி நாயகனாக நடிக்கிறார். தலைப்புக்கு ஏற்ப இத்தொடரில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து புகழ் பெற்ற பாப்ரி கோஷ் மற்றும் லப்பர் பந்து படத்தில் துணைப் பாத்திரத்தில் நடித்த மெளனிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா இத்தொடரை தயாரிக்கிறது. இளம் தலைமுறை ரசிகர்களைக் கவரும் வகையிலான தலைப்பில் இரு காதலை மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தொடர், ஒளிபரப்பான சில நாள்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், சனிக்கிழமையும் காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இதையும் படிக்க | சோனியா அகர்வால் வருகை.... விறுவிறுப்படையும் கயல் தொடர்!

Kalaignar TV Kaathuvaakkula Rendu Kaadhal serial telecasting time

குரல்வளை புற்றுநோயின் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) கண்டறியும்: ஆய்வில் தகவல்

ஒருவரின் குரல் பதிவைக் கொண்டு குரல்வளை புற்றுநோய் ஆரம்ப நிலையை செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் கண்டறியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செய்யறிவு அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ) யாரும் எதிர்பாரா... மேலும் பார்க்க

மகாபாரதப் பணிகளைத் துவங்கும் ஆமிர் கான்!

நடிகர் ஆமிர் கான் மகாபாரதத்தை திரைப்படமாக்கும் திட்டத்தைத் துவங்கவுள்ளார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகரான ஆமிர் கான் கடந்த சில ஆண்டுகளாகவே மார்க்கெட் இழந்த நடிகராக இருக்கிறார். காரணம், லால் சிங் சத்தா... மேலும் பார்க்க

என் தகுதி கடவுளுக்குத் தெரியும்: சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா

வேண்டியது கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை என்றும், நமது தகுதி என்ன? என்பது கடவுளுக்குத் தெரியும் எனவும் நடிகை கோமதி பிரியா பதிவிட்டுள்ளார்.தொடர் படப்பிடிப்பு, நிகழ்ச்சிகளில் போட... மேலும் பார்க்க

இதற்காகக் கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி: பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தன் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. ராதே ஷியாம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கின் மு... மேலும் பார்க்க

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்!

அய்யனார் துணை தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சல்மான் இணைந்துள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஜனவரி முதல் அய்யனார் துணை என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு... மேலும் பார்க்க

கூலி அலெலே போலேமா-க்கு என்ன அர்த்தம்?

கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிக்கு அனிருத் அர்த்தம் கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளத... மேலும் பார்க்க