செய்திகள் :

டிரம்ப் வரியால் சூரத்தில் வைர ஏற்றுமதி சரிவு!

post image

நாட்டின் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் 50 சதவீத வரி விதிப்பினால், குஜராத் மாநிலம் சூரத்தில் வைர ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 25 சதவீத வரி மற்றும் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரியால் நாட்டின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில், குஜராத் மாநிலம் சூரத், வைர நகரமாக மின்னிக் கொண்டிருந்த நிலையில், புதிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் எதுவும் வராமல் பொலிவிழந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வந்த வைர ஏற்றுமதி ஆர்டர்களும், டிரம்பின் அறிவிப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வை தொழிற்சாலைகள் தெரிவித்துள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னமும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், ஆண்டின் மொத்த வைர ஏற்றுமதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பாதிக்கும் மேல் ஏற்றுமதி செய்யப்படும் என்பதால், ஆர்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்த வைரத்தில் 68 சதவீதம் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையே மதிப்பில் எடுத்துக் கொண்டால் 42 சதவீதம். அடுத்த இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. இங்கிருந்து 28 சதவீத மதிப்பு கொண்ட வைரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இஸ்ரேலுக்கு வெறும் 19 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பதால், இந்த நாட்டுடன் இந்திய வைர நிறுவனங்கள் போட்டியிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கு வரும் வைர ஆர்டர்கள் கால் பங்குக்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் அதனால், உற்பத்தி 30 முதல் 35 சதவீதம் குறைந்துவிட்டாகவும் புதிய வரி விதிப்பினால், வைர ஏற்றுமதி நிறுவனங்களே சரிந்துவிடும் என்றும் வைர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை காத்திருக்கப் போவதாகவும், தங்களிடம் வைரத்தை வாங்கும் அமெரிக்க நிறுவனங்களிடம் பேசி, அவர்கள் வரி விதிப்பில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படும். அவர்கள் ஒப்புக்கொண்டால் ஓரளவுக்கு சமாளித்துவிடலாம். இந்த கடினமான காலத்தில்தான், வாங்குபவருக்கும் விற்பவருக்கும் இடையிலான உறவுக்கு பலப்பரீட்சை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் 6 முறை சுஷ்மா குப்தா பெயர்! ஆனால் ஆச்சரியம் ஒன்று!

மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலின் ஒரே பக்கத்தில் சுஷ்மா குப்தா என்ற பெண் ஆறு முறை இடம்பெற்று ஆச்சரியமளித்திருக்கும் நிலையில், ஆறு வாக்காளர் அட்டைக்கும் தலா ஒரு வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருப்பது உ... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரத்தில் மனிதாபிமான வழி தேவை: பிரியங்கா காந்தி

தில்லியில் தெருநாய்களை அகற்றும் விவகாரத்தில் மனிதாபிமான வழியைக் கண்டறிய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சுற்றித் திரியும் அனை... மேலும் பார்க்க

ஆதார் என்பது குடியுரிமை சான்று அல்ல: உச்ச நீதிமன்றம் ஏற்பு

புது தில்லி: ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் த... மேலும் பார்க்க

பசு தேசிய விலங்காக அறிவிப்பா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில்!

பசு மாட்டை நாட்டின் தேசிய விலங்காக அறிவிக்க எந்தவொரு திட்டமும் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கு குறித்து, உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், மூத்த பாஜக தலை... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் சத்தீஸ்கர் மசூதிகளில் தேசியக்கொடி ஏற்ற வக்ஃபு வாரியம் உத்தரவு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என வக்ஃப் வாரியம் உத்தரவிட்டுள்ளது.மாநில வக்ஃ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் ரெட் அலர்ட்! வாரம் முழுவதும் மீண்டும் கனமழை தொடரும்.. தயார்நிலையில் ராணுவம்!

உத்தரகண்டில், வரும் வாரம் முழுவதும் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு மாவட்டங்களுக்கு, ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உத்தரகண்டின் டெஹ்ராடூன், த... மேலும் பார்க்க