செய்திகள் :

வாக்குத் திருட்டு! அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள்!

post image

தேர்தல் ஆணையத்தின் மோசடிகளும் முறைகேடுகளும் நடைபெறுவதாக நாட்டின் எதிர்க்கட்சித் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

குற்றச்சாட்டுகளுக்குச் சான்றாக பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் வாக்காளர் பட்டியலை எடுத்துப் பல்வேறு ‘அதிசயங்களை’ப் பட்டியலிட்டார். தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களும் நடைபெறுகின்றன.

தொடர்ந்து, தற்போது தேர்தல் ஆணையத்தின் உபயமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிறைய வாக்காளர் பட்டியல் அதிசயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

தொடரும் அதிசயங்கள்:

57 வயது அப்பாவுக்கு 72 வயது மகன்

பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் 57 வயதான ராஜ்கமல்தாஸ் என்ற அப்பாவுக்கு 72 வயதான மகன்!

ராஜ்கமல்தாஸுக்கு மொத்தம் 50 குழந்தைகள். இளையவருக்கு வயது 28, இவர்களில் மூத்தவருக்கு வயது 72.

எல்லாரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்பது கூடுதல் அதிசயம்!

125 வயது சாதனை!

வாக்காளர் அடையாள அட்டையிலுள்ள மின்டா தேவி என்ற பெண்ணுக்கு வயது 125! பிறந்த தேதி 15.7.1900. பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

ஆறுமுகம்!

மகாராஷ்டிரத்திலுள்ள பல்ஹர் மக்களவை தொகுதி வாக்காளர் பட்டியலில் சுஷாமா குப்தாவின் விவரங்கள், ஆறு இடங்களில் வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களுடன்!

மூன்று வாக்காளர் அட்டை!

கர்நாடகத்தைச் சேர்ந்த ஷகுன் ராணி என்ற 72 வயது பெண்ணுக்கு ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் மூன்று வெவ்வேறு வாக்குச் சாவடியில் வாக்காளர் அட்டை உள்ளது.

முகவரி ’பூஜ்ஜியம்’

பெங்களூர் மத்திய மக்களவைத் தொகுதியிலுள்ள மகாதேவபுர பேரவைத் தொகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான வீடுகளின் முகவரி 0, - , # எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 5.333 பில்லியன் டாலர் (ரூ.46,718 கோடி) மதிப்புள்ள ஆடைகள் ஏற்றுமதியாகி வரும் நிலையில், டிரம்ப் அறிவித்த புதிய விரி விதிப்பால், ஆடைத் தயாரிப்புத் துறையில் 2... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3: சகோதரிகள் நாள்..! கொண்டாடத் தயாரா?

சகோதரிகள் நாள் எப்படி உருவானது தெரியுமா? சகோதரத்தைப் போற்றும் வகையில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுவது போல, பல நாடுகளில் சகோதரிகள் நாளும் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக ஆகஸ்ட்டில் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று... மேலும் பார்க்க

வெளியேற்றத் தயாரானதா மத்திய அரசு? தன்கர் ராஜிநாமாவின் வெளிவராத பின்னணி!

குடியரசுத் துணைத் தலைவர் (பதவிவழி மாநிலங்களவைத் தலைவர்) பதவியிலிருந்து ஜகதீப் தன்கரை வெளியேற்றுவது என்று ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணி முடிவு செய்துவிட்ட நிலையில்தான் வேறு வழியின்றி அவர் ராஜிநாமா செய்து... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!

சென்னை மாநகராட்சியில் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளை வனமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா். சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுமாா் ஒரு கோடி போ்... மேலும் பார்க்க

உறுப்பினர் சோ்க்கை மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது! மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் பணியாற்றி, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த பங்காற்றியவா்களில் முக்கியமானவா், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன். மனதில் சரியென்ற... மேலும் பார்க்க

ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம்! 30 ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய மு.க. முத்து!

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருப்பதாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்குடன் குறிப்பிட்டவர், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகனான மறைந்த மு.க. முத்து!1996 செப்... மேலும் பார்க்க