செய்திகள் :

டென்மார்க்: செல்லப்பிராணியை விலங்குகளுக்கு உணவளிக்க கேட்கும் பூங்கா - பின்னணி என்ன?

post image

டென்மார்க்கைச் சேர்ந்த 44 வயது பெண்மணி ஒருவர் மகள் வளர்த்த குதிரையை ஆல்போர்க் உயிரியல் பூங்காவிற்கு நன்கொடையாக அளித்துள்ளார். கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குதிரையை சிங்கங்களுக்கு உணவாக அளிக்க பூங்காவிற்கு கொடுத்துள்ளார்.

ஆல்போர்க் உயிரியல் பூங்கா, சிறிய மற்றும் ஆரோக்கியமான செல்லப்பிராணிகளை வேட்டையாடும் விலங்குகளுக்கு உணவாக அளிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

aalborg zoo

பெர்னில் சோல் என்ற பெண்மணி டென்மார்க்கின் அசென்ஸ் பகுதியில் ஒரு சிறிய பண்ணையை நடத்தி வருகிறார்.

அவர் தி டைம்ஸ் இதழிடம் பேசுகையில், ”2020ஆம் ஆண்டு எனது ஜெர்மன் குதிரையை சிங்கங்களுக்கு உணவாக கொடுக்க முடிவு செய்தேன், இது மிகவும் அதிர்ச்சியாகவும் விசித்திரமாகவும் தோன்றலாம். ஆனால் குதிரை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த விலங்குகள் எப்படியும் கழுத்தறுக்கப்படவே இருந்தன” என்று விளக்கினார்.

ஆல்போர்க் உயிரியல் பூங்காவின் நோக்கம்

ஆல்போர்க் உயிரியல் பூங்கா, வேட்டையாடும் விலங்குகளுக்கு இயற்கையான உணவு சங்கிலியைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது. இது விலங்குகளின் நலன் மற்றும் தொழில்முறை நேர்மையை உறுதிப்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை, உயிரியல் பூங்கா 22 குதிரைகள், 53 கோழிகள், 137 முயல்கள் மற்றும் 18 கினிப் பன்றிகளை நன்கொடையாக பூங்கா பெற்றுள்ளது.

சோல் இந்த நன்கொடைக்கு எந்தப் பணமும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

உயிரியல் பூங்காவின் கோரிக்கை

சமீபத்தில், ஆல்போர்க் உயிரியல் பூங்கா, கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகள் போன்ற "விரும்பப்படாத விலங்குகளை" நன்கொடையாக அளிக்குமாறு கோரியது.

இந்த செல்லப்பிராணிகள் கழுத்தறுக்கப்பட்டு பின்னர் மாமிச உண்ணிகளுக்கு உணவாக அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படிருந்தது. சிலர் செல்லபிராணிகளை நன்கொடையாக வழங்கினாலும் இவ்வாறு பூங்கா கோரியதற்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

World Elephant Day: மதுக்கரை விபத்து டு மருதமலை சிகிச்சை; 17 ஆண்டுக்கால யானை நிகழ்வுகள் |Photo Album

2008 - ரயில் மோதி இறந்த யானைகள் இடம் - மதுக்கரை 2009 - வழித்தவறி வந்த யானைகள் இடம் - கணுவாய் 2009 - வழித்தவறி வந்த யானைகள் இடம் - கணுவாய் 2010 - மின்சாரம் தாக்கி இறந்த யானை இடம் - செம்மேடு 2011- குடும... மேலும் பார்க்க

நண்பர்களை என்றும் மறக்காத பெண் கொரில்லாக்கள்; 20 ஆண்டுக்கால ஆய்வின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் உள்ள வோல்கானோஸ் தேசிய பூங்காவில் இரண்டு தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண் கொரில்லாக்கள் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கண்டறி... மேலும் பார்க்க

துர்நாற்றம் வீசும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதை காண திரண்ட மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் துர்நாற்றம் வீசும் கார்ப்ஸ் பூ ( Corpse flower) பூப்பதை காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இந்த அரிய வகை தாவரம் அதன... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி; விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியது ஏன்?

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் எதிரொலித்த ஒரு விசித்திரமான ஒலி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. 1999 ஆண்டு ஒலித்த இந்த மர்மமான ஒலி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்கா... மேலும் பார்க்க

ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?

உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது. எந்தவொரு அர... மேலும் பார்க்க

3500 ஏக்கர்; பிரபலமான மரக்காணம் உப்பளம்! - பிரமிப்பை ஏற்படுத்தும் டிரோன் காட்சிகள் | Album

மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்... மேலும் பார்க்க