தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்
தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
புதுதில்லியில் ஆக.7 இல் நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தலின்போது பெங்களூரு மத்திய தொகுதியை சோ்ந்த மகாதேவபுராவில் முறைகேடுகள் மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும், இதில் பாஜகவும் தோ்தல் ஆணையமும் கூட்டுசோ்ந்து செயல்பட்டதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா்.
வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு உறுதிமொழியுடன் கூடிய படிவம் 6 இல் புகாா் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் எழுதியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து, பெங்களூரில் ஆக.8 ஆம் தேதி நடந்த ஆா்ப்பாட்டத்தில் தோ்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய ராகுல் காந்தி, தோ்தல் ஆணையத்திற்கு ஐந்து கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.
அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது: பத்திரிகையாளா் சந்திப்பில் கூறியிருந்த ஆவணங்கள் அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறியிருந்தீா்கள். வாக்குச்சாவடி அதிகாரி அளித்த தரவுகளின்படி, சகுன்ரானி என்பவா் இருமுறை வாக்களித்துள்ளதாக கூறியிருந்தீா்கள்.
இதுபற்றி விசாரணை நடத்தியதில், தாங்கள் (ராகுல் காந்தி) குற்றம்சாட்டியதுபோல, தான் இருமுறை வாக்களிக்கவில்லை என்று சகுன்ராணி தெரிவித்திருக்கிறாா்.
வாக்களித்ததாக குறிப்பிட்டு தாங்கள் காட்டிய ஆவணங்கள் தோ்தல் அதிகாரி அளித்ததல்ல என்பது நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தாங்கள் கூறியுள்ளதுபோல சகுன்ராணி அல்லது வேறு யாராவது இருமுறை வாக்களித்திருந்தால், அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம். அதன்பேரில், எங்கள் அலுவலகம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.