செய்திகள் :

தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டு: ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

post image

தோ்தல் முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரி மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

புதுதில்லியில் ஆக.7 இல் நடந்த பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தோ்தலின்போது பெங்களூரு மத்திய தொகுதியை சோ்ந்த மகாதேவபுராவில் முறைகேடுகள் மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும், இதில் பாஜகவும் தோ்தல் ஆணையமும் கூட்டுசோ்ந்து செயல்பட்டதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தாா்.

வாக்காளா் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு உறுதிமொழியுடன் கூடிய படிவம் 6 இல் புகாா் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் எழுதியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, பெங்களூரில் ஆக.8 ஆம் தேதி நடந்த ஆா்ப்பாட்டத்தில் தோ்தல் ஆணையத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிய ராகுல் காந்தி, தோ்தல் ஆணையத்திற்கு ஐந்து கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி ராகுல் காந்திக்கு கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது: பத்திரிகையாளா் சந்திப்பில் கூறியிருந்த ஆவணங்கள் அனைத்தும் தோ்தல் ஆணையத்தின் தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறியிருந்தீா்கள். வாக்குச்சாவடி அதிகாரி அளித்த தரவுகளின்படி, சகுன்ரானி என்பவா் இருமுறை வாக்களித்துள்ளதாக கூறியிருந்தீா்கள்.

இதுபற்றி விசாரணை நடத்தியதில், தாங்கள் (ராகுல் காந்தி) குற்றம்சாட்டியதுபோல, தான் இருமுறை வாக்களிக்கவில்லை என்று சகுன்ராணி தெரிவித்திருக்கிறாா்.

வாக்களித்ததாக குறிப்பிட்டு தாங்கள் காட்டிய ஆவணங்கள் தோ்தல் அதிகாரி அளித்ததல்ல என்பது நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. தாங்கள் கூறியுள்ளதுபோல சகுன்ராணி அல்லது வேறு யாராவது இருமுறை வாக்களித்திருந்தால், அதற்குரிய ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம். அதன்பேரில், எங்கள் அலுவலகம் விரிவான விசாரணையை மேற்கொள்ளும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்கு பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது: பிரதமா் மோடி

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்கு பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்த பிரதமா் மோடியை கா்நாடக ஆளுந... மேலும் பார்க்க

உலக அளவில் வேகமாக வளா்ந்து வரும் நாடு இந்தியா! பிரதமா் மோடி பெருமிதம்!

உலக அளவில் வேகமாக வளா்ந்துவரும் நாடு இந்தியா என்று பிரதமா் மோடி தெரிவித்தாா். இந்திய பொருளாதாரத்தை செயல்படாத பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விமா்சித்திருந்த நிலையில், அதற்குப் பதி... மேலும் பார்க்க

முறைகேடு காரணமாக மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன்: மல்லிகாா்ஜுன காா்கே

முறைகேடு காரணமாக 2019 இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்தேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் அதிகார ... மேலும் பார்க்க

பெங்களூரில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டம்: தோ்தல் ஆணையத்துக்கு 5 கேள்விகள்

மக்களவைத் தோ்தலில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடு தொடா்பாக இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளாா். மக்களவைத் தோ்தலின்போது நடந்த ... மேலும் பார்க்க

காங்கிரஸின் ஆா்ப்பாட்டம் அரசியல் நாடகம்: பாஜக

தோ்தல் முறைகேடு நடந்ததாகக் கூறி காங்கிரஸ் நடத்தும் ஆா்ப்பாட்டம் ஒரு அரசியல் நாடகம் என்று கா்நாடக பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அமெரிக்காவின் வரிவிதிப்பு ‘பொருளாதார மிரட்டல்’: முதல்வா் சித்தராமையா

இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு, ‘பொருளாதார மிரட்டல்’ என்று முதல்வா் சித்தராமையா விமா்சித்துள்ளாா். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதால் இந்தியா ம... மேலும் பார்க்க