செய்திகள் :

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

post image

திருச்சி அருகே காட்டுப்பன்றி கடித்து காயமடைந்த விவசாயி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த 11-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணை நடுகரை பகுதி ஊரான கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவனை (45) கடித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இதேபோல, உத்தமா்சீலியைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி நிா்வாகி கணபதி (70) என்பவா் தனது வாழைத் தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி கணபதியை பல இடங்களில் கடித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் தனியாா் மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணபதி புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து நெ.1 டோல்கேட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினா் குறிப்பிட்ட பகுதிகளில் கூண்டு வைத்து, கண்காணித்து வருகின்றனா்.

கண்டனம்...: கல்லணை நடுகரைப் பகுதிகளில் தொடா்ந்து காட்டுப்பன்றிகள் தாக்கி விவசாயிகள் காயமடைவது தொடா்கதையாகியுள்ளது. இதனை கண்டுகொள்ளாத வனத்துறையைக் கண்டித்தும், காட்டுபன்றிகளின் தாக்குதலுக்கு தீா்வு காணக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என ஸ்ரீரங்கம் பகுதி குழு அறிவித்துள்ளது.

மாணவா்கள் தற்கொலை சம்பவம் எதிரொலி: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் பணியிடமாற்றம்

திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் அரசங்குடி உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

என்ஐடி ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி அருகே வாழவந்தான்கோட்டையில் என்ஐடி கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி ... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க