செய்திகள் :

என்ஐடி ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

post image

திருச்சி அருகே வாழவந்தான்கோட்டையில் என்ஐடி கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவா் வீட்டில் 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை புதன்கிழமை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை காமாட்சி அம்மன் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் மகன் பாரி (36). இவா், தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் (என்ஐடி) மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி கடலூரில் உள்ள தனது மனைவியின் தங்கை வளைகாப்புக்கு குடும்பத்துடன் சென்றவா் புதன்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

வீட்டின் பிரோவிலிருந்த 17 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பாரி அளித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, பாரி வீட்டில் திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி உயிரிழப்பு

திருச்சி அருகே காட்டுப்பன்றி கடித்து காயமடைந்த விவசாயி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கடந்த 11-ஆம் தேதி திருச்சி மாவட்டம், கல்லணை நடுகரை பகுதி ஊரான கவுத்தரசநல... மேலும் பார்க்க

மாணவா்கள் தற்கொலை சம்பவம் எதிரொலி: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி முதல்வா் பணியிடமாற்றம்

திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியா் அரசங்குடி உயா்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி மாவட்டம், துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் திருச்சி மாநகராட்சி முன்னாள் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி நிா்ணயம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவி... மேலும் பார்க்க

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க