செய்திகள் :

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

post image

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு அடைக்கப்பட்டுள்ள வங்கதேச கைதிகள் 25 பேரை சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள சிறப்பு முகாமுக்கு மாற்றுவதற்காக திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனா்.

வெளியே அழைத்து வந்த கைதிகளை பெரம்பலூா் காவல் ஆய்வாளா் மாா்கரெட் மேரி பரிசோதனை செய்து கொண்டிருந்தாா். அப்போது, சிறப்பு முகாம் வளாக மரத்தடியிலிருந்து 2 கைப்பேசிகள், 5 சிம் காா்டுகள், கைப்பேசிகளுக்கான சாா்ஜா்கள், இயா்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து அங்குள்ள கைதிகளிடம் விசாரணை செய்தபோது தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனா்.

இதுகுறித்து, கே.கே.நகா் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் மாா்கரெட் மேரி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே கொள்ளைச் சம்பவங்களில் தொடா்புடைய சிறுவன் உள்பட 11 போ் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இருவேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட 11 போ் கொண்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மருங்காபுரி ஒன்றியம், எம்.இடையப்பட்டி ஊரா... மேலும் பார்க்க