செய்திகள் :

Vote Chori: `ராகுல்காந்தி கூறுவது சரியானது; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்' -திவ்யா ஸ்பந்தனா

post image

வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

பிகார் மாநிலத்தில் 16 நாள்கள் வாக்காளர் அதிகார நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.

வாக்கு திருட்டு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்நிலையில், "அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டாது.

ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும்" என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.

மேலும் ராகுல் காந்தி கூறிய புகாருக்கும் விளக்கம் அளித்து பேசியிருந்தார்.

இருப்பினும் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக திவ்யா ஸ்பந்தனா பேசியிருக்கிறார். "வாக்குத் திருட்டு நடைபெற்று வருவதாக ராகுல்காந்தி கூறுவது மிகச் சரியானது.

திவ்யா ஸ்பந்தனா
திவ்யா ஸ்பந்தனா

தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு கேலிக்கூத்தானது. எந்த கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவே இல்லை.

வாக்காளர் பட்டியலில் ஏன் இத்தனை போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள்? அவற்றை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

``நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்; ஓட்டுநர் பேஷண்ட் ஆகிவிடுவார்'' - பகிரங்கமாக எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

பிரசார கூட்டத்துக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்கிற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரசார ச... மேலும் பார்க்க

ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தத்தில் இணையும் அமெரிக்கா; ஆனால், இந்தியா மீது வரி! - என்னங்க சார் உங்க சட்டம்?

அமெரிக்கா பிற நாடுகளின் மீது 'பரஸ்பர வரி' விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்தது தான். இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது 25 சதவிகித வரி விதிக்கப்பட்டது. பின்னர், ரஷ்யா உடன் வணிகம் செய்கிறோம் எ... மேலும் பார்க்க

`மதிக்க முடியாவிட்டால், விலகி இருங்கள்' - ஷூ அணிந்து யாகத்தில் கலந்துகொண்ட லாலு; கிளம்பிய எதிர்ப்பு

பீகார் முன்னாள் முதல்வர், பல ஊழல் வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்று இப்போது ஜாமீனில் இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் பாட்னாவில் ஆன்மி... மேலும் பார்க்க