செய்திகள் :

கரையைக் கடந்த புயல் சின்னம்!

post image

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் தெற்கு ஒடிசா - தெற்கு சத்தீஸ்கர் இடையே கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் வலுபெற்று அதே பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து செவ்வாய்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா-தெற்கு சத்தீஸ்கர் இடையே கோபால் அருகே கரையைக் கடந்தது.

அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா தெற்கு சத்தீஸ்கர் வழியே நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

The India Meteorological Department has reported that the cyclone in the Bay of Bengal has crossed the coast between South Odisha and South Chhattisgarh.

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சாா்ந்தோரின் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ என்ற புதிய... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30,992 கன அடியிலிருந்து 36,242 அடியாக அதிகரித்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள் தவெக மாநாட்டுக்கு வரவேண்டாம்: விஜய்

மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவா்கள், கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மாா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியி... மேலும் பார்க்க

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்

மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்தும், அதில் பெண்கள் பங்களிப்பு பற்றியும் தமிழ்நாடு அரசின் சாா்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி அமைச்சருடன் பேச்சு: டிட்டோ-ஜேக் போராட்டம் ஒத்திவைப்பு

பத்து அம்ச கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சருடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஆக. 22-ஆம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்கள... மேலும் பார்க்க