செய்திகள் :

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

post image

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும், விமானத்தை பத்திரமாக விமானிகள் தரையிறக்கினர்.

கிரீஸ் நாட்டின் கோர்ஃபு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகருக்கு கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி காண்டோர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 757 ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இதில், 273 பயணிகள், 8 விமான ஊழியர்கள் பயணித்தனர்.

இந்த விமானம் புறப்பட்ட சில மணிநேரங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, வலதுபுற என்ஜினில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதையறிந்த விமானிகள், அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை கொடுத்து இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர்.

பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

விமானத்தின் வலதுபுற என்ஜினில் தீப்பற்றியதை அறிந்த விமானிகள் உடனடியாக அந்த என்ஜினை அணைத்துள்ளனர். இதனால், விமானத்தின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

முதலில் கோர்ஃபு விமான நிலையத்துக்கு திரும்ப முயற்சித்த நிலையில், பின்னர் மற்றொரு என்ஜின் உதவியுடன் தொடர்ந்து பறக்க முடிவு செய்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட பிறகு சுமார் 40 நிமிடங்கள் வரை வானத்தில் பறந்து, இத்தாலியின் பிரின்டிசி விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்ட பின்னர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

விமானத்தின் ஒரு என்ஜின் அணைக்கப்பட்டதால், விமானத்தின் உள்ளே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அனைவரும் பீதியடைந்துள்ளனர்.

பிரின்டிசி விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கோரிய காண்டோர் ஏர்லைன்ஸ், மாற்று விமானம் மூலம் பயணிகளை ஜெர்மனிக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, ஒரு என்ஜினில் தீ எரிந்தபடி விமானம் பறக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும், விமானத்தின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கியது.

A mid-air fire broke out in the engine of a plane departing from Greece to Germany.

இதையும் படிக்க : தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது, உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கான நிதியுதவி என இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.இந்த... மேலும் பார்க்க

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.ரஷியா - உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியி... மேலும் பார்க்க

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இருவரும் விரைவில் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி இடையேயான பேச்சுவ... மேலும் பார்க்க

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

இலங்கை: தமிழா் பகுதிகளில் கடை அடைப்பு

இலங்கையில் தமிழா்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாண பகுதிகளில் ராணுவக் குவிப்பு மற்றும் ராணுவ வீரா்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடை அடைப்புப் போராட்டம் திங்கள... மேலும் பார்க்க

மியான்மா்: டிச. 28-இல் தோ்தல்

மியான்மரில் வரும் டிசம்பா் 28-ஆம் தேதி முதல் தோ்தல் நடைபெறும் என்று ராணுவ ஆட்சியாளா்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பல கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தோ்தலுக்கான முழு... மேலும் பார்க்க