செய்திகள் :

மின்சாரம் தாக்கி ராணுவ வீரா் பலி: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ராணுவ வீரரின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணா நகா் பகுதியை சோ்ந்தவா் பிரமிளா. இவருடைய மகன் வைகுந்த் (28). பிரமிளாவின் கணவா் ராஜேஷ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

வைகுந்த், 8 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சோ்ந்தாா். சென்னை ராணுவ முகாம் 7-ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்த அவா், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிப்பூா் மாநிலத்திற்கு மாற்றப்பட்டாா்.

அங்கிருந்து ராணுவ பயிற்சிக்காக அஸ்ஸாம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டாா். கடந்த 19-ஆம் தேதி இரவு பயிற்சிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வைகுந்த் உடல், வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. திருவனந்தபுரம் ராணுவ முகாம் மேஜா் சௌரங் சிங் தலைமையிலான வீரா்களின் முழு ராணுவ மரியாதைக்குப்பின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் வினய்குமாா் மீனா, விஜய்வசந்த் எம்.பி., கல்குளம் தாசில்தாா் ஜாண் ஹெனி, திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவா் நசீா் உள்பட பொதுமக்கள் பலா் அஞ்சலி செலுத்தினா்.

முன்சிறை பகுதியில் நாளை மின்தடை

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25 ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது. முன்சிறை துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநி... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: முளகுமூட்டில் ஆட்சியா் ஆய்வு

கல்குளம் வட்டத்துக்குள்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்... மேலும் பார்க்க

பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, நெல்லிக்கன்விளையைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி பமலா (54). இவா் உண... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் டென்னிஸ் (44). சுமைதூக்கும் தொழிலாளி. இ... மேலும் பார்க்க

யாா் பிரதமா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்: செல்வப்பெருந்தகை

யாா் பிரதமா், யாா் முதல்வா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை. நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: திருநெல்வேலி... மேலும் பார்க்க

விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழப்பு

இரணியல் அருகே விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழந்தாா். தக்கலை அருகே பள்ளியாடியைச் சோ்ந்தவா் ஜோசப் ஆன்றணி (40). சிஆா்பிஎப் வீரா். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனா். கடந்த சில நாள்களுக்கு முன... மேலும் பார்க்க