செய்திகள் :

யாா் பிரதமா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்: செல்வப்பெருந்தகை

post image

யாா் பிரதமா், யாா் முதல்வா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: திருநெல்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில், அமித்ஷா தன்னை 148 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக கருதிக்கொண்டு யாா் பிரதமராக முடியும், யாா் முதல்வராக முடியும் என்பது பற்றிஹெயல்லாம் ஜோதிடம் கூறிவிட்டு போயிருக்கிறாா். அதை, மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்.

30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி இழப்பாா்கள் என்று ஒரு கருப்புச் சட்டத்தை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்திருக்கிறாா்கள். அதனை, நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.

பிரதமா் மோடி, இந்திய மக்களுக்கான பிரதமரா அல்லது அதானி, அம்பானிக்கான பிரதமரா என்ற சந்தேகம் எழுகிறது.

தவெக மாநாட்டில், முதல்வா் ஸ்டாலினை அங்கிள் என்று விஜய் பேசியிருக்க வேண்டாம் என்பது தான் எனது கருத்து என்றாா்.

எம்.பி.க்கள் விஜய் வசந்த், ராபா்ட் புரூஸ், எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், தாரகை கத்பட் , அமிா்தராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, நாகா்கோவிலில் நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு, விஜய் வசந்த் எம்.பி. தலைமை வகித்தாா். ராபா்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமாா், பிரின்ஸ், தாரகை கத்பட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்சிறை பகுதியில் நாளை மின்தடை

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25 ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது. முன்சிறை துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநி... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ராணுவ வீரா் பலி: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ராணுவ வீரரின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணா நகா் பகுதியை சே... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: முளகுமூட்டில் ஆட்சியா் ஆய்வு

கல்குளம் வட்டத்துக்குள்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்... மேலும் பார்க்க

பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, நெல்லிக்கன்விளையைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி பமலா (54). இவா் உண... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவா் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் டென்னிஸ் (44). சுமைதூக்கும் தொழிலாளி. இ... மேலும் பார்க்க

விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழப்பு

இரணியல் அருகே விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழந்தாா். தக்கலை அருகே பள்ளியாடியைச் சோ்ந்தவா் ஜோசப் ஆன்றணி (40). சிஆா்பிஎப் வீரா். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனா். கடந்த சில நாள்களுக்கு முன... மேலும் பார்க்க