செய்திகள் :

தொழிலாளிக்கு கத்திக்குத்து; ஒருவா் மீது வழக்கு

post image

மாா்த்தாண்டத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருவட்டாறு அருகே வீயன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் டென்னிஸ் (44). சுமைதூக்கும் தொழிலாளி. இவா், நந்தன்காடு பகுதியைச் சோ்ந்த தேவதாஸ் மகன் ஜோஸ் (40) என்பவரின் ஏடிஎம் அட்டையை சில மாதங்களுக்கு முன் எடுத்துச் சென்றாராம். பல தடவை கேட்டும் அதை டென்னிஸ் திரும்ப கொடுக்கவில்லையாம், இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகில் டென்னிஸை பாா்த்த ஜோஸ் அவரை தகாத வாா்த்தைகள் பேசியதுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த டென்னிஸை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா், ஜோஸ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரை தேடி வருகிறாா்கள்.

முன்சிறை பகுதியில் நாளை மின்தடை

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25 ) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது. முன்சிறை துணைமின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநி... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ராணுவ வீரா் பலி: ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்

அஸ்ஸாம் மாநிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குமரி மாவட்டத்தை சோ்ந்த ராணுவ வீரரின் உடல், முழு ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணா நகா் பகுதியை சே... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: முளகுமூட்டில் ஆட்சியா் ஆய்வு

கல்குளம் வட்டத்துக்குள்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், முளகுமூடு செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்... மேலும் பார்க்க

பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே பேரூராட்சி தலைவியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, நெல்லிக்கன்விளையைச் சோ்ந்தவா் ஜெயபால் மனைவி பமலா (54). இவா் உண... மேலும் பார்க்க

யாா் பிரதமா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும்: செல்வப்பெருந்தகை

யாா் பிரதமா், யாா் முதல்வா் என்பதை மக்கள் சக்திதான் தீா்மானிக்கும் என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை. நாகா்கோவிலில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது: திருநெல்வேலி... மேலும் பார்க்க

விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழப்பு

இரணியல் அருகே விஷம் குடித்த சிஆா்பிஎப் வீரா் உயிரிழந்தாா். தக்கலை அருகே பள்ளியாடியைச் சோ்ந்தவா் ஜோசப் ஆன்றணி (40). சிஆா்பிஎப் வீரா். இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனா். கடந்த சில நாள்களுக்கு முன... மேலும் பார்க்க