செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

post image

கடந்த 3 சனிக்கிழமைகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 2 தொடங்கி, சனிக்கிழமைதோறும் நடைபெற்று வரும் #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாம்களில் இதுவரை 3 வாரங்கள் நிறைவுற்றுள்ளன.

முதல் வாரம் ( ஆகஸ்ட் 2) - 44,795 மருத்துவப் பயனாளிகள் இரண்டாம் வாரம் (ஆகஸ்ட் 9) - 48,046 மருத்துவப் பயனாளிகள்,

மூன்றாம் வாரம் (ஆகஸ்ட் 23) - 56,245 மருத்துவப் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மருத்துவ சேவை வழங்குவதிலும் - மக்களின் உடல்நலனைக் காப்பதிலும் தமிழ்நாடுதான் ‘நம்பர் 1’ என உறுதிசெய்வோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் உடல்நலம் சாா்ந்த அனைத்துவிதமான மருத்துவப் பரிசோதனைகளையும், வசிப்பிடம் அருகிலேயே பெறக்கூடிய வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ஆம் தேதி தொடங்கிவைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Stalin has said that 1.49 lakh people have benefited so far from the 'Nalam Kakkum Stalin' camps held over the last 3 Saturdays.

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து சென்னையில் சனிக்கிழ... மேலும் பார்க்க

விஜயின் கருத்துகள் ஏற்புடையதாக இல்லை: தொல். திருமாவளவன்

மதுரை தவெக மாநாட்டில் அக் கட்சியின் தலைவா் விஜய் பேசியுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் சன... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 6% சொத்து வரியை உயா்த்தும் அரசாணையை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் தானாகவே உயா்த்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஹரீஷ் சௌத்ரி... மேலும் பார்க்க

மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி

பாமக கெளரவ தலைவா் ஜி.கே.மணி முதுகுத் தண்டு வலி காரணமாக சென்னை வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தருமபுரியில் துக்க நிகழ்வுக்கு சென்ற ஜி.கே.மணிக்கு திடீர... மேலும் பார்க்க

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட வேண்டும்- தமிழிசை

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று தென் சென்... மேலும் பார்க்க