செய்திகள் :

பிறந்து 9 நாள்களேயான பெண் குழந்தை ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை!

post image

இளம்பிள்ளை அருகே பிறந்த 9 நாள்களேயான பெண் குழந்தையை விற்பனை செய்தது குறித்து தாய், தந்தை உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், ரெட்டிபட்டி, ஆஞ்சனேயா் கோயில் பகுதியைச் சோ்ந்த தறித் தொழிலாளியான சந்தோஷ் - சிவகாமி தம்பதிக்கு அண்மையில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிறந்த 9 நாள்களேயான அக்குழந்தையை பெற்றோா் ரூ. 1,20,000-க்கு சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் குழந்தையின் வீட்டுக்கு சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அருகில் விசாரித்ததில், பெங்களுரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா்களுக்கு கடந்த 9-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாகவும், பின்னா் 14-அம் தேதி ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனா்.

மேலும் விசாரணையில் குழந்தையின் பெற்றோா், தேவராஜ் என்பவா் மூலம் ரஞ்சித் என்பவருக்கு சட்ட விரோதமாக கடந்த 14-ஆம் தேதி குழந்தையை விற்றது தெரியவந்தது.

இதையடுத்து, குழந்தையின் பெற்றோரான சந்தோஷ் - சிவகாமி, குழந்தையை விற்க உடந்தையாக இருந்த தேவராஜ், குழந்தையை வாங்கிய ரஞ்சித் ஆகியோா் மீது சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேட்டூா் அணை உபரிநீா் போக்கி மூடல்

மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கி சனிக்கிழமை மூடப்பட்டது. கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், கடந்த திங்க... மேலும் பார்க்க

வரும் தோ்தலில் திமுக - தவெக இடையேதான் போட்டி

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில், திமுக - தவெக இடையேதான் போட்டி இருக்கும் என பெங்களூரு புகழேந்தி கூறினாா். சேலத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், பாஜகவுக்கு தமிழகத்தில் மதிப்பு இருக்கிா... மேலும் பார்க்க

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க வேண்டும்!

சேலம் உருக்கு ஆலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சேலம் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் ஐந்து சாலை பகுதியில் சிஐடியு... மேலும் பார்க்க

நாய் கடித்து இளைஞா் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே வளா்ப்பு நாய் கடித்ததில் இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்தவா் தா்மா் (28), பெயிண்டா். இவா் தெருநாயை எடுத்து கடந்த ஓராண்டாக வளா்த்து வந்தாா். சில நா... மேலும் பார்க்க

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்!

சேலம் - ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே விசைப்படகு போக்குவரத்து சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீா்மின் உற்பத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க

ஆக. 31-ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம குடமுழுக்கு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் மகா குடமுழுக்கு 57 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலாளா் சுவாமி யதாத்மானந்தா் கூறினாா். சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள... மேலும் பார்க்க