செய்திகள் :

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல்: மயக்கவியல் மருத்துவர் கைது!

post image

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக தேடப்பட்டுவந்த மயக்கவியல் மருத்துவரை தெலங்கானா சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர்.

தனக்கு நெருக்கமான சில மருத்துவர்களுடன் சேர்ந்து இந்த மருத்துவர் மனித உடல் உறுப்புகள் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டிருப்பதும், ஒவ்வொரு அறுவைச் சிகிச்சைக்கும் அந்த மருத்துவருக்கு ரூ. 2.50 லட்சம் தொகையும் அளிக்கப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஹைதராபாத்தின் சரூர்நகர் - கோதப்பேட் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் மனித உடல் உறுப்புகள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. தொடர்ந்து, இது தொடர்பாக சரூர்ந்கர் காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. அதன்பின் கடந்த ஏப்ரலில், இந்த வழக்கு சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் உள்பட வேறு சில மருத்துவர்கள் என இதுவரை மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் மாநகரில் பல மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைகல் நடைபெறுவதும், அப்போது, உடல் உறுப்பு தானம் வழங்கவரும் நபர்களும் உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிகளுக்கும் மயக்க மருந்து செலுத்தி, உடல் உறுப்பு கொள்ளையும் நடைபெற்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு மருத்துவர், எப்போதெல்லாம் சட்டவிரோத அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகிறதோ அப்போது மேற்கண்ட மயக்கவியல் மருத்துவரை அழைத்து, கூட்டாக உடல் உறுப்பு திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகியுள்ள பிற நபர்களையும் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெலங்கானா சி.ஐ.டி. பிரிவின் கூடுதல் இயக்குநர் சாரு சின்ஹா ஐபிஎஸ் தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Hyderabad: CID arrests anesthesiologist in inter-state human organ trafficking case

இந்தியா-ஆஸ்திரேலியா வா்த்தக ஒப்பந்தம்: 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நிறைவு

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே விரிவான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பான 11-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நிறைவடைந்தது. இருநாடுகளிடையே கடந்த 2022, டிசம்பரில் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க

எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு குற்றச்சாட்டு: அனில் அம்பானி தரப்பு நிராகரிப்பு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அனில் அம்பானி தரப்பு நிராகரித்துள்ளது. இதனிடையே, எஸ்பிஐ புகாரின்பேரில், சிபிஐ அதி... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜார்க்கண்டின் ராஞ்சியில் நியூ மார்க்கெட் சௌக் அருகே பேருந்தில் இருந்து காரில் மாற்றப்பட்டபோத... மேலும் பார்க்க

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.புது தில்லியில் நடைபெற்றதனியார் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசிய ... மேலும் பார்க்க

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க