செய்திகள் :

பொருளாதாரத்தில் பற்றாக்குறை மாறி, ஜனநாயகத்தில் பற்றாக்குறையான சூழல்! -சுதர்சன் ரெட்டி

post image

இந்தியாவில் இன்றைய காலக்கட்டத்தில் ஜனநாயகத்தில் பற்றாக்குறை என்னும் சூழல் உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சோ்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளாா். காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டி’ கூட்டணி வேட்பாளராக தெலங்கானாவைச் சோ்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

சி.பி.ராதாகிருஷ்ணன், சுதா்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளதன்மூலம், தோ்தலில் தென்னிந்தியாவை சோ்ந்த இருவருக்கு இடையே போட்டி உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பி. சுதர்சன் ரெட்டி சனிக்கிழமை(ஆக. 23) அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது:

"கடந்த காலங்களில், பொருளாதாரப் பற்றாக்குறை என்றதொரு பேச்சு அடிபட்டது. ஆனால் இப்போது, ஜனநாயகத்தில் பற்றாக்குறை நாட்டில் நிலவுகிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு சவாலான சூழலும் நிலவுகிறது. அரசமைப்பின்படி இயங்கும் ஜனநாயகமாக இந்தியா தொடர்ந்தாலும், அது இப்போது அழுத்தத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்திய அரசமைப்பு அச்சுறுத்தலின்கீழ் இருக்கிறதா? என்பது குறித்து விவாதம் நடத்த தயாராக இருந்தல், அதனை தான் வரவேற்பதாகவும் தெரிவித்தார். ஜனநாயகம் என்பது தனி நபர்களுக்கு இடையிலான மோதலை விடுத்து, கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக அதிகம் இருக்க வேண்டும். அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான உறவு மேம்பட தாம் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

"அரசமைப்பை பாதுக்காப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றால் (குடியரசு துணைத் தலைவர் பதவி) அரசமைப்பை உயர்த்திப்பிடிக்கும் எமது பயணம் இனியும் தொடரும். அரசமைப்புக்கே பிரதான முன்னுரிமையளித்து உயர்த்திப்பிடித்த நான், ஒரு நீதிபதியாக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போதும் அதில் இதுவே குறிப்பிடப்பட்டிருந்து” என்றார்.

B Sudershan Reddy on Saturday said there was a "deficit in democracy" in the country and the Constitution was "under challenge".

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

அனில் அம்பானியால் பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ. 2,929.05 கோடி இழப்பு ஏற்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், சிபிஐ அதிகாரிகளால் இன்று(ஆக. 23) அனில் அம்பானி இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை மு... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சி. பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனை!

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று(ஆக. 23) ஆலோசனை மேற்கொண்டார்.குடியரசு துணைத் தலைவா் தோ்தல் செப்.9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்ப... மேலும் பார்க்க

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல்: மயக்கவியல் மருத்துவர் கைது!

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக தேடப்பட்டுவந்த மயக்கவியல் மருத்துவரை தெலங்கானா சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு நெருக்கமான சில மருத்துவர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொரு... மேலும் பார்க்க