செய்திகள் :

நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

தமிழ்நாட்டிற்கு உரிய நிதி வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம் இன்று(ஆக. 23) தொடங்கி நடைபெற்று வருகிறது.

நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,

"தமிழ்நாட்டிற்கு என்று பல சிறப்புக்கள் உள்ளன. எல்லோரும் சமம் என்ற அடிப்படையில் அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சம உரிமை கிடைக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம்.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பல முற்போக்கான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். இதற்கு அடித்தளம் அமைத்தது திராவிடம். பல்வேறு முற்போக்கான திட்டங்களுக்கு பல தலைவர்கள் காரணமாக இருந்திருக்கின்றனர்

ஹிந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு தீவிரம் காட்டியும் தமிழ்நாடு அரசு முறியடித்துள்ளது. தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பு முழக்கத்தை பல மாநிலங்களும் ஏற்க முன்வந்துள்ளன.

1968இல் இரு மொழிக் கொள்கையை சட்டமன்றத்தில் தீர்மானமாக அண்ணா நிறைவேற்றினார். மாநில உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாடு அரசியல் சமூக நீதி அரசியலாகத்தான் இருக்கிறது. அனைத்து மக்களுக்கான சமூகநீதி அரசாக திமுக உள்ளது.

பெண்ணுரிமை, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருக்கிறது. மாநிலங்கள் சுயாட்சி பெற தமிழ்நாடு அரசு இந்த தேசிய கருத்தரங்கை நடத்துகிறது.

மத்திய அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் உரிய நிதி பங்கை வழங்காமல் குறுகிய அரசியல் நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு நெருக்கடிகளை மீறி தமிழ்நாட்டை உயர்த்தி வருகிறோம்" என்று பேசினார்.

TN Chief minister MK stalin speech on National Seminar on Union-State Relations

அங்கன்வாடிகளுக்கு சொந்த கட்டடம் அமைக்க வேண்டும் - அண்ணாமலை

அங்கன்வாடி மையங்களுக்குச் சொந்தக் கட்டடம் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு! தமிழக விவசாயிகள் பற்றி ஆலோசனை!

தில்லியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகானை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசியுள்ளார். தில்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அமைச்சர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது! உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்

சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு சில நாள்களாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பின் காரணத்தினால் மேட்டூர... மேலும் பார்க்க

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

பொன்னேரி அருகே மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை தடுப்புச் சுவற்றில் மோதி அந்தரத்தில் அரசுப் பேருந்து தொங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியி... மேலும் பார்க்க

8 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 25-ஆம் தேதியில் ஓரிசா - மேற்கு... மேலும் பார்க்க

29 ஆண்டுகளுக்குப் பின்... தொடர்ந்து 3 நாள்கள் கனமழை!

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 29 ஆண்டுகளுக்குப் பின் தொடர்ந்து மூன்று நாள்கள் கனமழை பெய்திருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் ஜான் பிரதீப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க