செய்திகள் :

ஜார்க்கண்டில் இயல்பு வாழ்க்கை முடங்கியது: கனமழைக்கு 5 பேர் பலி!

post image

ஜார்க்கண்டின் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில நாள்களாக மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் அவரது ஏழு வயது மகனும் இறந்தனர்.

ராஜ்நகர் தொகுதியில் உள்ள தண்டு கிராமத்தில் கனமழைக்கு எட்டு பேர் காயமடைந்தனர். சந்தோஷ் லோஹர் என்பவரின் குடிசை வீடு இடிந்து விழுந்ததில் மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை ஒருவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

கர்சவான் காவல் நிலையப் பகுதியில் உள்ள கோல் சிம்லாவில் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

முன்னா போத்ராவின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அவரது ஐந்து வயது மகன் சம்பவ இடத்திலேயே இறந்தார், போத்ரா, அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது மகள் காயமடைந்தனர். அவர்கள் செரைகேலா சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்ரா மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை பெருக்கெடுத்து ஓடும் சியாரி ஆற்றில் ஒரு தம்பதியினர் அடித்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். கணவரின் உடல் மீட்கப்பட்டது, மனைவி மாயமாகியுள்ளார்.

மழை தொடர்பான சம்பவத்தில் மாவட்டத்தின் பதல்கடா தொகுதியில் உள்ள கைரடோலா கிராமத்திலும் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக, பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன, வீடுகள் இடிந்து விழுந்தன, சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

ராஞ்சியில், பிஸ்கா நிலையத்திற்கு அருகில் கட்டுமானத்தில் உள்ள ரயில் மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள கான்கிரீட் பலகைகள் இடிந்து விழுந்ததால், தேசிய நெடுஞ்சாலை 43 இல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 25 வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Five people were killed, one person was missing, and several others were injured as heavy rains wreaked havoc in parts of Jharkhand, officials said on Saturday morning.

வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

நாட்டின் நிர்வாகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் மாற்றுவதில் விண்வெளி தொழில்நுட்பத்தின் பங்கை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். புது தில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் கானொளி வாயிலாக பிரதமர... மேலும் பார்க்க

அயோத்தியா, பிரயாக்ராஜ் தொடர்ந்து பெயர் மாறப்போகும் நகரம் இதுவா?

உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியா, பிரயாக்ராஜ் நகரங்களைத் தொடர்ந்து அலிகார் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று மாநில துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மௌரியா வேண்டுகோள் வைத்துள்ளார்.ஹிந்து கௌரவ் நாள் கொண்டாட்டத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

உத்தரகண்டில் சமோலி மாவட்டத்தின் தாராலியில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இந்திய ராணுவப் படைகள் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமோலி மாவட்டத்த... மேலும் பார்க்க

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

பிகாரில் மக்கானா விவசாயிகளைச் சந்தித்து பேசிய ராகுல் காந்தி!

பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார். பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் ... மேலும் பார்க்க

இந்திய வானில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

இந்திய வான்வழியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது செப்.24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் ஆபரேஷன் ... மேலும் பார்க்க