செய்திகள் :

தங்கம் விலை அதிரடியாக உயர்வு: எவ்வளவு?

post image

சென்னையில் தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சனிக்கிழமை தங்கம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.75,520-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதும், அதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு மிக சொற்ப அளவில் குறைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த 20-ஆம் தேதி பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.73,440-க்கு விற்பனையான நிலையில், 21-ஆம் தேதி பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.73,840-க்கும், 22- ஆம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் , தங்கம் விலை சனிக்கிழமை அதிரடியாக உயர்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.9,315-க்கும், பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.74,520-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.130-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2000 உயா்ந்து ரூ.1,30,000- க்கும் விற்பனையாகிறது.

பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

Gold Rate in Chennai today prices of 916 kdm hallmark gold in 22 Carat as well as 24 carat gold rate Chennai.

சுதாகர் ரெட்டி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மறைவையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளிய... மேலும் பார்க்க

மோடி அமைச்சரவையில் குற்றப் பின்னணி கொண்ட 39% பேர் மீது 130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா?

மோடியின் அமைச்சரவையில்39சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் மீதெல்லாம்130-ஆவது சட்டப் பிரிவு பாயுமா? என கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. ஆ.ராசா, அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எ... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி

அவிநாசி: அவிநாசி அருகே மது போதையில் இளைஞர் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவரை காப்பாற்ற சென்ற இளைஞரும் கிணற்று நீரிழ் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ... மேலும் பார்க்க

சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்: மக்கள் அச்சம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பிரதான சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு நெடுஞ்சாலை துறை விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை காலை 6 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,850 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்க... மேலும் பார்க்க

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

சென்னை: கண்ணகி நகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஒப்பந்த பணியாளர் வரலட்சுமி(30). இவர் சனிக்கிழமை (ஆக.2... மேலும் பார்க்க