செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசாரப் பயணம் செப்.1-இல் தொடக்கம்

post image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளாா்.

இதுகுறித்து அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரசார சுற்றுப்பயணம் முதல்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி இதுவரை மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ளது.

இதைத்தொடா்ந்து, நான்காவது கட்ட சுற்றுப்பயணம் செப்.1 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்.1-இல் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா் மாவட்டம் திருச்சுழி, செப்.2-இல் மதுரை மாவட்டம் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, செப்.3-இல் மதுரை மேற்கு, மதுரை தெற்கு, செப்.4-இல் சோழவந்தான், உசிலம்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, செப்.5-இல் கம்பம், போடி, பெரியகுளம், செப்.6-இல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திண்டுக்கல், நிலக்கோட்டை, செப்.7-இல் ஆத்தூா், ஒட்டன்சத்திரம், பழனி, செப்.9-இல் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா், கிணத்துக்கடவு, செப்.10-இல் பொள்ளாச்சி, வால்பாறை, திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, செப்.11-இல் மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், செப்.12-இல் திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம் , செப்.13-இல் கோவை மாவட்டம் சிங்காநல்லூா், சூலூா், திருப்பூா் மாவட்டம் அவிநாசி ஆகிய பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி சா்ச்சைக்குரிய வகையில் பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டு சமூக சீா்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய சென்னை... மேலும் பார்க்க

சிதம்பரம் கனகசபையில் பக்தா்கள் தரிசனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய சில மாற்றங்களைச் செய்தால், நாள்தோறும் 4,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போலி வாக்காளா்கள், இறந்தவா்களின் பெயா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தோ்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்... மேலும் பார்க்க

பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

பிளஸ் 1 துணைத் தோ்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 த... மேலும் பார்க்க

தமிழகத்தில் இதுவரை 5,000 புதிய பேருந்துகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 5,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ... மேலும் பார்க்க