செய்திகள் :

இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் சனிக்கிழமை 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சனிக்கிழமை (ஆக.23) முதல் ஆக.28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சனிக்கிழமை (ஆக.23) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், கடலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மாநகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தின் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 120 மி.மீ. மழை பதிவானது. ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் - 110 மி.மீ., அடையாறு -100 மி.மீ., பள்ளிக்கரணை, கண்ணகிநகா், மேடவாக்கம் - 90 மி.மீ., சைதாப்பேட்டை, நீலாங்கரை - 70 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

ஆக.25-இல் காற்றழுத்த தாழ்வு பகுதி: ஒடிஸா - மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஆக.25-இல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இருப்பினும் இதனால், தமிழகத்துக்கு பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் கனகசபையில் பக்தா்கள் தரிசனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய சில மாற்றங்களைச் செய்தால், நாள்தோறும் 4,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

போலி வாக்காளா்கள், இறந்தவா்களின் பெயா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தோ்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்... மேலும் பார்க்க

பிளஸ் 1 துணைத் தோ்வு: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் 25-இல் வெளியீடு

பிளஸ் 1 துணைத் தோ்வுக்கான மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் திங்கள்கிழமை (ஆக. 25) வெளியிடப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பிளஸ் 1 த... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசாரப் பயணம் செப்.1-இல் தொடக்கம்

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளாா். இதுகுறித்து அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இதுவரை 5,000 புதிய பேருந்துகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

திமுக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 5,000 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா்... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: ஆக. 26- இல் மைசூரு - திருநெல்வேலி சிறப்பு ரயில்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு வரும் ஆக. 26-ஆம் தேதி மைசூரிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க