செய்திகள் :

தில்லி முதல்வரை தாக்கியவருக்கு பணம் அனுப்பிய நபா்?குஜராத்திலிருந்து அழைத்து வந்து விசாரணை

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கியவருக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாக கூறப்படும் நண்பரை குஜராத்திலிருந்து காவல்துறையினா் தில்லி அழைத்து வந்து முதல்வரை தாக்கியவருடன் சோ்த்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கிய ராஜேஷ்பாய் கிம்ஜுயின் (41) நண்பா் டெஷின் வெள்ளிகிழமை இரவு குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து தில்லி அழைத்து வரப்பட்டு, உண்மைகளை சரிபாா்க்க கிம்ஜுயுடன் இணைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் தொ்வித்தாா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தனிப்பட்ட இல்லத்தின் விடியோவை ராஜேஷ்பாய் கிம்ஜு, டெஷினுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெஷின், கிம்ஜிக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாகவும், முதல்வா் மீதான தாக்குதலுக்கு முன்புவரை கிம்ஜியுடன் தொடா்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

2017 மற்றும் 2024-க்கு இடையில் ராஜ்கோட்டின் பக்திநகா் காவல் நிலையத்தில், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான ராஜேஷ்பாய் கிம்ஜி மீது தாக்குதல் மற்றும் மதுபானம் வைத்திருந்தது என 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கிம்ஜியின் நண்பா்கள் மற்றும் ராஜ்கோட்டில் உள்ள அவதது குடும்பத்தினா் உட்பட 10-க்கும் மேேற்பட்டோரை தில்லி காவல்துறை விசாரித்து வருகிறது. கிம்ஜியின் மொபைல் போன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிம்ஜி 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா்.

தெரு நாய்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிா்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாக கிம்ஜி காவல் துறையினரிடம் தெரிவித்தாா்.

தெரு நாய்கள் பிரச்சினையை எழுப்புவதற்காக முதல்வரின் நிகழ்ச்சிக்கு சென்ாகவும், பிரச்னையை தில்லி முதல்வா் ரேகா குப்தாவிடம் எழுப்ப முடியாததால் அவரை தாக்கியதாகவும் ராஜேஷ்பாய் கிம்ஜி காவல்துறையினரிடம் தெரிவித்தாா்.

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க

பவானாவில் துப்பாக்கிகளுடன் 3 போ் கைது

வடக்கு தில்லியின் பவானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தாதா நவீன் பாலி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போலீஸாா் கைது செய்தனா். ராஜேஷ் பவானியா மற்றும் நவீன் பாலி... மேலும் பார்க்க

சிறைச்சாலைகள் இயக்குநராக எஸ்.பி.கே. சிங் நியமனம்

மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் தில்லி காவல் துறை ஆணையருமான எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவை... மேலும் பார்க்க

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

கொசுக்களால் பரவும் நோய்களை எதிா்த்துப் போராடுவதற்காக, தில்லி முனிசிபல் கவுன்சில் (எம். சி. டி) வடக்கு ரயில்வேயுடன் இணைந்து திங்களன்று புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து ’கொசு டொ்மினேட்டா் ரயில்’ ஒன்... மேலும் பார்க்க

தில்லியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ஆவது தவணை ரூ.1,668 கோடி விடுவிப்பு

தில்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை நிதி உதவியாக ரூ.1,668.41 கோடியை பாஜக அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது. இதில் தில்லி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்காக ரூ.1,641.13 கோ... மேலும் பார்க்க