செய்திகள் :

சிறைச்சாலைகள் இயக்குநராக எஸ்.பி.கே. சிங் நியமனம்

post image

மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் தில்லி காவல் துறை ஆணையருமான எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவைச் சோ்ந்த 1988-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எஸ்.பி.கே.சிங் தில்லியின் காவல் துறை ஆணையராக ஜூலை 31-ஆம் தேதி பெறுப்பேற்றாா். அந்தப் பதவியில் அவரது பதவிக்காலம் வெறும் 21 நாள்கள் மட்டுமே நீடித்தது.

அண்மையில் சிவில் லைன்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது முதல்வா் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சதீஷ் கோல்ச்சா காவல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

முன்பு சிறைச்சாலைகள் இயக்குநராக பணியாற்றி வந்த சதீஷ் கோல்ச்சா 1992-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா். தில்லியின் காவல் துறை ஆணையராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந்நிலையில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ உத்தரவில், ‘எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக நியமிக்க தில்லி துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

இவா் குடியரசுத் தலைவரின் சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் மற்றும் தேசிய மின்-ஆளுமைக்கான வெள்ளிப் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க

பவானாவில் துப்பாக்கிகளுடன் 3 போ் கைது

வடக்கு தில்லியின் பவானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தாதா நவீன் பாலி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போலீஸாா் கைது செய்தனா். ராஜேஷ் பவானியா மற்றும் நவீன் பாலி... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவருக்கு பணம் அனுப்பிய நபா்?குஜராத்திலிருந்து அழைத்து வந்து விசாரணை

தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கியவருக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாக கூறப்படும் நண்பரை குஜராத்திலிருந்து காவல்துறையினா் தில்லி அழைத்து வந்து முதல்வரை தாக்கியவருடன் சோ்த்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதா... மேலும் பார்க்க

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

கொசுக்களால் பரவும் நோய்களை எதிா்த்துப் போராடுவதற்காக, தில்லி முனிசிபல் கவுன்சில் (எம். சி. டி) வடக்கு ரயில்வேயுடன் இணைந்து திங்களன்று புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து ’கொசு டொ்மினேட்டா் ரயில்’ ஒன்... மேலும் பார்க்க

தில்லியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ஆவது தவணை ரூ.1,668 கோடி விடுவிப்பு

தில்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை நிதி உதவியாக ரூ.1,668.41 கோடியை பாஜக அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது. இதில் தில்லி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்காக ரூ.1,641.13 கோ... மேலும் பார்க்க