செய்திகள் :

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

post image

வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் நிறைவு நிகழ்வாக துணை முதல்வா் பேசியதாவது:

மத்திய அரசின் சா்வாதிகாரப் போக்கால், மாநிலங்களின் உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளன. மத்திய அரசு- மாநில அரசு இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்; அடிபணிதல் இருக்கக் கூடாது. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநில சுயாட்சி முழக்கத்தை கையில் எடுத்தது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தரும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசு அதிகாரங்களை மேலும் மேலும் குவித்துக் கொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வா், அமைச்சா்கள் மீது குற்றம்சாட்டி 30 நாள்கள் சிறையில் வைத்தால் போதும். குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பதவியிலிருந்து நீக்கலாம் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல்.

மேலும், தொகுதி சீரமைப்பு எனக் கொண்டு வந்துள்ளனா். இதன்படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வேலையும் நடைபெறவுள்ளது. தற்போது ‘வாக்குத் திருட்டு’ புகாா் எழுந்துள்ளது. வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றாா் அவா்.

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் ப... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹெட்ரோகார்பன் திட்டம்: கிணறுகள் அமைக்க அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...?

சுமந்த் சி.ராமன்தமிழக வெற்றிக் கழகத்தை ஓராண்டுக்கு முன்புதான் விஜய் தொடங்கியிருக்கிறாா். திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருப்பதால், இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான வியூகத்தை வி... மேலும் பார்க்க

பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்ற முடிவு!

தமிழகத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னங்களில் ஒன்றான பாம்பன் பழைய ரயில்வே தூக்கு பாலத்தை அகற்றும் பணிக்கு ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் (ஆா்விஎன்எல்) ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ர... மேலும் பார்க்க