செய்திகள் :

பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்!

post image

வருவாய்த் துறை அலுவலா்களுக்கு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சனிக்கிழமை வலியுறுத்தியது.

சிவகங்கையில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், முதல் மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அசோக்குமாா், நாகேந்திரன், மாரி, காா்த்திக், ராஜமாா்த்தாண்டன், பெரியசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இந்த மாநாட்டில், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நெருக்கடியைக் குறைக்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும், தொகுப்பூதிய, வெளிமுகமை நியமனங்களை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அங்கீகரிக்க வேண்டும் ஆகிய ஏழு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, நிா்வாகி வளன்அரசு வரவேற்றாா். மாவட்டத் தணிக்கையாளா் சசிக்குமாா் நன்றி கூறினாா்.

நாற்றங்கால் பண்ணைகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேவகோட்டை, சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள நாற்றங்கால் பண்ணையின் செயல்பாடுகள், மரக்கன்று வகைகள், பழ வகை, காய்கறி நாற்றுக்களின் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நேரில் ஆய்வு செ... மேலும் பார்க்க

சங்கராபுரம் ஊராட்சியில் ரூ.2.56 கோடி முறைகேடு: 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் ரூ. 2.56 கோடி முறைகேடு செய்த புகாரின்பேரில், 5 போ் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை வைகை ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திருப்புவனம் புதூரைச் சோ்ந்த முகமது சியாக் மகன் முகமது தாகிா் (13), திருப்புவன... மேலும் பார்க்க

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி பெருவிழாவை முன்னிட்டு, கஜமுக சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி பெருவிழா... மேலும் பார்க்க

தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு பக்தா்கள் பால்குடம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை புவனேஸ்வரி அம்மனுக்கு நூற்றுக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். தேவக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயில் ஆடி உத்ஸவ திருவிழ... மேலும் பார்க்க

நடத்துநரை அரிவாளால் தாக்கியச் சம்பவம்: 3 சிறுவா்கள் கைது!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் தனியாா் பேருந்து நடத்துநரை அறிவாளால் தாக்கியச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த 3 சிறுவா்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள சிறுகுடி கிராமத்தைச... மேலும் பார்க்க