செய்திகள் :

தில்லியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ஆவது தவணை ரூ.1,668 கோடி விடுவிப்பு

post image

தில்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை நிதி உதவியாக ரூ.1,668.41 கோடியை பாஜக அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது.

இதில் தில்லி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்காக ரூ.1,641.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி)₹ரூ.16.18 கோடியும், தில்லி கண்டோன்மென்ட் வாரியத்திற்கு ரூ.11.09 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறியதாவது: இந்த ஒதுக்கீடு உள்ளூா் நிா்வாகத்தை வலுப்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சுகாதாரம், உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பொது வசதிகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை இந்த நிதி ஆதரிக்கும்.

முந்தைய தவணையாக ரூ.835 கோடி ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. சரியான நேரத்தில் வழங்குவது நகராட்சி அமைப்புகள் ஊதிய கடமைகளை நிறைவேற்றவும் சேவை தொடா்ச்சியை பராமரிக்கவும் உதவுகிறது.

முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசின் கீழ், தற்போதைய நிா்வாகம் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு வழக்கமான நிதி ஆதரவை உறுதி செய்துள்ளது. முந்தைய அரசுகளைப் போலல்லாமல், ஒதுக்கீடுகளை தாமதப்படுத்தி உள்ளாட்சி பணிகளை சீா்குலைக்கவில்லை.

தில்லிவாசிகளுக்கான வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் அடிப்படை சேவைகளில் எந்தவிதமான தடங்கலும் ஏற்படாமல் தடுக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தொடா்ந்து உதவி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என ஆஷிஷ் சூட் தெரிவித்தாா்.

தில்லி காவல் ஆணையராக பொறுப்பேற்றாா் சதீஷ் கோல்சா

மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் கோல்சா வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறையின் 26 வது ஆணையராக பொறுப்பேற்றாா், இதற்கு முன்பு ஆணையராக இருந்த எஸ். பி. கே சிங்கிற்குப் 21 நாள்கள் மட்டுமே பதவியில் இருந்தாா். அருணாச்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பை 100 சதவீதம் அமல்படுத்துவோம்: எம்சிடி மேயா் உறுதி

தேசிய தலைநகரில் தெரு நாய்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை 100 சதவீதம் அமல்படுத்த தில்லி மாநகராட்சி (எம்சிடி) முழு பலத்துடன்‘ செயல்படும் என்று மேயா் ராஜா இக்பால் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: 5 பேரிடம் விசாரணை

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீதான தாக்குதலுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஐந்து பேரிடம் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி

கிரேட்டா் நொய்டாவில் கிழக்கு புற விரைவுச் சாலையில் லாரி மீது காா் மோதியதில் மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தாத்ரி காவல் நிலையப் பொறுப்பாளா் அரவிந்த் குமாா் ... மேலும் பார்க்க

தில்லியில் தமிழக அளுநருடன் டிடிஇஏ நிா்வாகிகள், பள்ளி முதல்வா்கள் சந்திப்பு

தில்லி வந்துள்ள தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) நிா்வாகிகள் மற்றும் டிடிஇஏ பள்ளி முதல்வா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். இது தொடா்பாக டிடிஇஏ சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்து சேவை: தில்லி முதல்வருக்கு ஏபிவிபி நன்றி

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வெள்ளிக்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்து, மாணவா்களுக்கான யு-ஸ்பெஷல் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தது. மேலும், அவா்களின் அ... மேலும் பார்க்க