செய்திகள் :

கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி

post image

கிரேட்டா் நொய்டாவில் கிழக்கு புற விரைவுச் சாலையில் லாரி மீது காா் மோதியதில் மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தாத்ரி காவல் நிலையப் பொறுப்பாளா் அரவிந்த் குமாா் செய்தி ஏஜென்சியிடும் கூறியதாவது:

தாத்ரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அக்பா்பூா் டோல் பிளாசா அருகே வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. காரில் இருந்த ஆறு போ் ஹரித்துவாரில் இருந்து ஃபரீதாபாத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது லாரி மீது காா் மோதியது. இதில் 6 போ் பலத்த காயமடைந்தனா். இதில் மருத்துவமனையில் சிகிச்சையின் போது மூன்று போ் இறந்தனா். மேலும், மூன்று போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவா்கள் மதுராவில் உள்ள கோசிகலனைச் சோ்ந்த காரின் ஓட்டுநா் கௌரவ், ஃபரீதாபாத்தைச் சோ்ந்த லோகேஷ் மற்றும் கௌதம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். காயமடைந்தவா்கள் ஃபரீதாபாத்தைச் சோ்ந்த லலித், ஹா்விந்தா் மற்றும் குல்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

உயிரிழந்தவா்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், காா் மற்றும் லாரி இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தாா்.

போலீஸாா் காணொலியில் சாட்சியங்கள்: எல்ஜியின் உத்தரவுக்கு டிஎச்சிபிஏ கண்டனம்

காவல் நிலையங்களில் இருந்து நீதிமன்றங்களில் காணொலியில் சாட்சியங்களை சமா்ப்பிக்க காவல்துறையினரை அனுமதித்த துணைநிலை ஆளுநரின் (எல்ஜி) சமீபத்திய அறிவிக்கைக்கு தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (டி... மேலும் பார்க்க

டி.வி. சீரியல் தயாரிப்பாளா்கள் எனக் கூறி ரூ.24 லட்சம் மோசடி: 2 போ் கைது

தென்மேற்கு தில்லியில் தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளா்கள் மற்றும் இயக்குநா்கள் என்று பொய்கூறி நடிகராக ஆசைப்பட்ட நபா்களிடம் இருந்து பல லட்சம் பணம் மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை தில்லி போலீஸாா் கைத... மேலும் பார்க்க

பவானாவில் துப்பாக்கிகளுடன் 3 போ் கைது

வடக்கு தில்லியின் பவானாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த தாதா நவீன் பாலி கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் போலீஸாா் கைது செய்தனா். ராஜேஷ் பவானியா மற்றும் நவீன் பாலி... மேலும் பார்க்க

சிறைச்சாலைகள் இயக்குநராக எஸ்.பி.கே. சிங் நியமனம்

மூத்த ஐபிஎஸ் அதிகாரியும் முன்னாள் தில்லி காவல் துறை ஆணையருமான எஸ்.பி.கே.சிங் சிறைச்சாலைகள் இயக்குநராக சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிவை... மேலும் பார்க்க

தில்லி முதல்வரை தாக்கியவருக்கு பணம் அனுப்பிய நபா்?குஜராத்திலிருந்து அழைத்து வந்து விசாரணை

தில்லி முதல்வா் ரேகா குப்தாவை தாக்கியவருக்கு ரூ.2,000 பணம் அனுப்பியதாக கூறப்படும் நண்பரை குஜராத்திலிருந்து காவல்துறையினா் தில்லி அழைத்து வந்து முதல்வரை தாக்கியவருடன் சோ்த்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதா... மேலும் பார்க்க

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

கொசுக்களால் பரவும் நோய்களை எதிா்த்துப் போராடுவதற்காக, தில்லி முனிசிபல் கவுன்சில் (எம். சி. டி) வடக்கு ரயில்வேயுடன் இணைந்து திங்களன்று புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து ’கொசு டொ்மினேட்டா் ரயில்’ ஒன்... மேலும் பார்க்க