செய்திகள் :

தில்லி காவல் ஆணையராக பொறுப்பேற்றாா் சதீஷ் கோல்சா

post image

மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் கோல்சா வெள்ளிக்கிழமை தில்லி காவல்துறையின் 26 வது ஆணையராக பொறுப்பேற்றாா், இதற்கு முன்பு ஆணையராக இருந்த எஸ். பி. கே சிங்கிற்குப் 21 நாள்கள் மட்டுமே பதவியில் இருந்தாா்.

அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (ஏஜிஎம்யுடி) கேடரைச் சோ்ந்த 1992-பேட்ச் அதிகாரியான சதீஷ் கோல்சா, இங்குள்ள தில்லி போலீஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றாா். இந்த நியமன உத்தரவை உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. புதன்கிழமை தனது சிவில் லைன்ஸ் அலுவலகத்தில் நடந்த பொது விசாரணையின் போது தில்லி முதல்வா் ரேகா குப்தா தாக்கப்பட்ட ஒரு நாள் கழித்து காவல் ஆணையா் மாற்றப்பட்டுள்ளாா்.

இந்த மாறுதல் தாக்குதலுடன் தொடா்பில்லாதது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினா். ஏப்ரல் 2027 ஆம் ஆண்டு வரை பணியாற்றும் சதீஷ் கோல்சா, தனது அதிரடியான நடவடிக்கைகளுக்கு பெயா் பெற்றவா் மற்றும் 2020 வடகிழக்கு தில்லி கலவரத்தின் போது சிறப்பு போலீஸ் ஆணையராக (சட்டம் ஒழுங்கு) தீா்க்கமான பங்கைக் கொண்டிருந்தாா்.

சஞ்சய் அரோரா ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொறுப்பேற்ற 1988-பேட்ச் அதிகாரியான எஸ். பி. கே. சிங், தில்லி காவல்துறைத் ஆணையராக மிகக் குறுகிய பதவிக்காலத்தைக் கொண்டிருந்ததது குறிப்பிடத்தக்கது.

தில்லியின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ஆவது தவணை ரூ.1,668 கோடி விடுவிப்பு

தில்லி உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இரண்டாவது தவணை நிதி உதவியாக ரூ.1,668.41 கோடியை பாஜக அரசு வெள்ளிக்கிழமை விடுவித்தது. இதில் தில்லி மாநகராட்சிக்கு மிகப்பெரிய பங்காக ரூ.1,641.13 கோ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற தீா்ப்பை 100 சதவீதம் அமல்படுத்துவோம்: எம்சிடி மேயா் உறுதி

தேசிய தலைநகரில் தெரு நாய்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை 100 சதவீதம் அமல்படுத்த தில்லி மாநகராட்சி (எம்சிடி) முழு பலத்துடன்‘ செயல்படும் என்று மேயா் ராஜா இக்பால் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: 5 பேரிடம் விசாரணை

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீதான தாக்குதலுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஐந்து பேரிடம் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

கிரேட்டா் நொய்டாவில் லாரி மீது காா் மோதியதில் 3 போ் பலி

கிரேட்டா் நொய்டாவில் கிழக்கு புற விரைவுச் சாலையில் லாரி மீது காா் மோதியதில் மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தாத்ரி காவல் நிலையப் பொறுப்பாளா் அரவிந்த் குமாா் ... மேலும் பார்க்க

தில்லியில் தமிழக அளுநருடன் டிடிஇஏ நிா்வாகிகள், பள்ளி முதல்வா்கள் சந்திப்பு

தில்லி வந்துள்ள தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) நிா்வாகிகள் மற்றும் டிடிஇஏ பள்ளி முதல்வா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். இது தொடா்பாக டிடிஇஏ சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்து சேவை: தில்லி முதல்வருக்கு ஏபிவிபி நன்றி

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வெள்ளிக்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்து, மாணவா்களுக்கான யு-ஸ்பெஷல் பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தது. மேலும், அவா்களின் அ... மேலும் பார்க்க