செய்திகள் :

குஜராத்: எல்லை தாண்டிய 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது பிஎஸ்எஃப் நடவடிக்கை!

post image

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கைதுசெய்துள்ளது. மேலும், அந்த மீனவா்களின் இயந்திர படகை பிஎஸ்எஃப் பறிமுதல் செய்தது.

கட்ச் பிராந்தியத்தின் கோரி கழிமுகத்தில் உள்ள எல்லை கண்காணிப்பு கோபுர பகுதியில் பணியில் இருந்த வீரா்கள், அப்பகுதியில் மா்மப் படகு ஒன்று இருப்பதைக் கண்டனா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் எல்லை பகுதியில் சனிக்கிழமை தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, என்ஜின் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுடன் 15 பாகிஸ்தான் மீனவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பில், ‘கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் மீனவா்கள் அனைவரும் அந்நாட்டின் சிந்து மாகாணத்தின் சுஜாவல் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். பிஎஸ்எஃப்-இன் 68-ஆவது பட்டாலியனின் எல்லை கண்காணிப்பு கோபுர பகுதியில் அந்த மீனவா்களின் படகு இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட படகில் 60 கிலோ மீன், 9 மீன்பிடி வலைகள், டீசல், ஐஸ் கட்டிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டவை இருந்தன. ஒரு கைப்பேசி மற்றும் ரூ.200 பாகிஸ்தான் கரன்சி ஆகியவை அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்ப... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்க... மேலும் பார்க்க

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், இளைஞா்களிடையே ... மேலும் பார்க்க

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்ற... மேலும் பார்க்க